கோவை : ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனைப் பெற்று வரும் 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி ஏழு தமிழர் விடுதலைக்கான கூட்டமைப்பு சார்பில் கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை : ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனைப் பெற்று வரும் 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி ஏழு தமிழர் விடுதலைக்கான கூட்டமைப்பு சார்பில் கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ரவி உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்யலாம் என தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசிற்கு கடிதம் அனுப்பியது. இதனைக் கருத்தில் கொண்ட உச்சநீதிமன்றத்தின் அறிவுரைப்படி, தமிழக அரசு உடனடியாக அமைச்சரவை கூட்டி தீர்மானத்தை நிறைவேற்றி அடுத்தநாளே ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

விடுதலை தீர்மானம் அனுப்பி வைக்கப்பட்ட இரண்டு மாதங்கள் ஆன நிலையில், தீர்மானத்தை ஆளுநர் மாளிகையில் கிடப்பில் போடப்பட்டதாகவும், அப்பாவி ஏழு தமிழர்களின் விடுதலையை தமிழக ஆளுநர் வேண்டும் என்றே காலந்தாழ்த்துவதாகக் கூறி ஏழு தமிழர் விடுதலைக்கான கூட்டமைப்பு சார்பில் தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின் போது அமைச்சரவை தீர்மானத்தை ஆளுநர் உடனடியாக ஏற்றுக் கொண்டு ஏழு பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்களை விடுவிப்பதில் ஆட்சேபனை இல்லை என சோனியா காந்தி, ராகுல், பிரியங்கா ஆகியோர் கூறி உள்ளதைக் கவனத்தில் கொள்ள வேண்டும், 8 கோடி தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து விடுதலைக்கான உத்தரவை உடனடியாக பிறப்பிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து, அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ரவி உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்யலாம் என தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசிற்கு கடிதம் அனுப்பியது. இதனைக் கருத்தில் கொண்ட உச்சநீதிமன்றத்தின் அறிவுரைப்படி, தமிழக அரசு உடனடியாக அமைச்சரவை கூட்டி தீர்மானத்தை நிறைவேற்றி அடுத்தநாளே ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

விடுதலை தீர்மானம் அனுப்பி வைக்கப்பட்ட இரண்டு மாதங்கள் ஆன நிலையில், தீர்மானத்தை ஆளுநர் மாளிகையில் கிடப்பில் போடப்பட்டதாகவும், அப்பாவி ஏழு தமிழர்களின் விடுதலையை தமிழக ஆளுநர் வேண்டும் என்றே காலந்தாழ்த்துவதாகக் கூறி ஏழு தமிழர் விடுதலைக்கான கூட்டமைப்பு சார்பில் தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின் போது அமைச்சரவை தீர்மானத்தை ஆளுநர் உடனடியாக ஏற்றுக் கொண்டு ஏழு பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்களை விடுவிப்பதில் ஆட்சேபனை இல்லை என சோனியா காந்தி, ராகுல், பிரியங்கா ஆகியோர் கூறி உள்ளதைக் கவனத்தில் கொள்ள வேண்டும், 8 கோடி தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து விடுதலைக்கான உத்தரவை உடனடியாக பிறப்பிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து, அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.