திருப்பூர் : அரசு மதுபானக் கடையில் விற்பனை செய்யப்பட்ட மதுபாட்டிலில் பூச்சி இருப்பதாக குடிமகன்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்
திருப்பூர் : அரசு மதுபானக் கடையில் விற்பனை செய்யப்பட்ட மதுபாட்டிலில் பூச்சி இருப்பதாக குடிமகன்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
திருப்பூர் காளிபாளையத்தைச் சேர்ந்த தங்கராசு என்பவர் அதே பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடையில் கடந்த 29-ம் தேதி மதுபானம் வாங்கியுள்ளார். மதுபானத்தை வாங்கி வெளியே வந்தபின் அதில் கொசு மற்றும் பூச்சிகள் இருப்பதைக் கண்டு உடனடியாக மாற்றித் தருமாறு கேட்டுள்ளார். ஆனால், மதுபானக் கடை ஊழியர்கள் மதுபாட்டிலை மாற்றி தர மறுத்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த தங்கராசு மதுபாட்டிலுடன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலவலகத்தில் புகார் அளித்தார்.
பொதுமக்கள் பல்வேறு அடிப்படைத் தேவைகளுக்காக மனு அளித்து வரும் நிலையில், மதுபான பாட்டிலில் பூச்சி இருப்பதாக குடிமகன்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பூர் காளிபாளையத்தைச் சேர்ந்த தங்கராசு என்பவர் அதே பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடையில் கடந்த 29-ம் தேதி மதுபானம் வாங்கியுள்ளார். மதுபானத்தை வாங்கி வெளியே வந்தபின் அதில் கொசு மற்றும் பூச்சிகள் இருப்பதைக் கண்டு உடனடியாக மாற்றித் தருமாறு கேட்டுள்ளார். ஆனால், மதுபானக் கடை ஊழியர்கள் மதுபாட்டிலை மாற்றி தர மறுத்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த தங்கராசு மதுபாட்டிலுடன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலவலகத்தில் புகார் அளித்தார்.
பொதுமக்கள் பல்வேறு அடிப்படைத் தேவைகளுக்காக மனு அளித்து வரும் நிலையில், மதுபான பாட்டிலில் பூச்சி இருப்பதாக குடிமகன்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.