பழைய முறைப்படி சாதி சான்றிதழ் வழங்கக்கோரி செல்போன் டவர் மீது ஏறி போராட்டம்

திருப்பூர் : பழைய முறைப்படி சாதி சான்றிதழ் வழங்கக் கோரி சீர் மரபினர் அமைப்பைச் சேர்ந்தவர் செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்பூர் : பழைய முறைப்படி சாதி சான்றிதழ் வழங்கக் கோரி சீர் மரபினர் அமைப்பைச் சேர்ந்தவர் செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 



தமிழகத்தில் குற்றப்பழங்குடி சட்டத்தால் பாதிக்கப்பட்ட கள்ளர், மறவர், சேர்வை, வலையர் உள்ளிட்ட 68 சாதியினரை தனிப் பட்டியலில் வைத்து 1,979 வரை டி நோட்டிபைடு டிரைப்ஸ் (DNT) என சாதி சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது. இதன்மூலம், உயர் கல்வி இலவசமாக வழங்கப்பட்டு வந்த நிலையில், அதன்பிறகு டி நோட்டிபைடு கம்யுனிட்டி என சாதி சான்றிதழ் மாற்றி வழங்கப்பட்டு வருகிறது. 

இதன் காரணமாக, தங்கள் உரிமைகள் மறுக்கப்படுவதாகவும், தங்களுக்கு பழைய முறையிலேயே சாதி சான்றிதழை வழங்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட சீர் மரபினர் நலச்சங்கத்தின் தலைவர் வள்ளிக்கண்ணு என்பவர் கே.டிகே. தோட்டம் அருகே அமைந்துள்ள பி.எஸ்.என்.எல் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். 

இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த மத்திய போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறக்கினர். இதனையடுத்து, அவரைக் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட்டது.



Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...