கோவை: ரயில்வே சேலம் கோட்டம் மற்றும் அறம் அறக்கட்டளை இணைந்து ஸ்வச்தா ஹி சேவை நிகழ்ச்சியை கோவை ரயில் நிலையத்தில் இன்று நடத்தினர்.
கோவை: ரயில்வே சேலம் கோட்டம் மற்றும் அறம் அறக்கட்டளை இணைந்து ஸ்வச்தா ஹி சேவை நிகழ்ச்சியை கோவை ரயில் நிலையத்தில் இன்று நடத்தினர்.
தூய்மைக்காக மக்களின் பங்களிப்பை வலியுறுத்தும் விதமாக ஸ்வச்தா ஹி சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன் நான்காம் ஆண்டு கொண்டாட்டம் நாளை காந்தி ஜெயந்தி தினத்தில் கொண்டாடப்படுகிறது.

இதனை நினைவுகூரும் விதமாகவும், மக்கள் மத்தியில் இந்த சேவை தொடர்பான விழிப்புணர்வை கொண்டு சேர்க்கும் விதமாகவும் ரயில்வே சேலம் கோட்டம் மற்றும் அறம் அறக்கட்டளை இணைந்து கோவை ரயில் நிலையத்தில் பறையாட்டம் நடத்தினர்.

இதில், தூய்மை இந்தியா தொடர்பாகவும், பயணிகள் தங்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டியதன் அவசியங்கள் குறித்தும் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.
இதனைத் தொடர்ந்து, தூய்மை திட்டத்தை வலியுறுத்தி வீதி நாடகம் நடத்தப்பட்டது. அதில், கழிவறையை தூய்மையாக வைப்பது, இயற்கை முறை வேளாண்மை போன்ற கருத்துக்கள் இடம்பெற்றிருந்தன.

தூய்மைக்காக மக்களின் பங்களிப்பை வலியுறுத்தும் விதமாக ஸ்வச்தா ஹி சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன் நான்காம் ஆண்டு கொண்டாட்டம் நாளை காந்தி ஜெயந்தி தினத்தில் கொண்டாடப்படுகிறது.

இதனை நினைவுகூரும் விதமாகவும், மக்கள் மத்தியில் இந்த சேவை தொடர்பான விழிப்புணர்வை கொண்டு சேர்க்கும் விதமாகவும் ரயில்வே சேலம் கோட்டம் மற்றும் அறம் அறக்கட்டளை இணைந்து கோவை ரயில் நிலையத்தில் பறையாட்டம் நடத்தினர்.

இதில், தூய்மை இந்தியா தொடர்பாகவும், பயணிகள் தங்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டியதன் அவசியங்கள் குறித்தும் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.
இதனைத் தொடர்ந்து, தூய்மை திட்டத்தை வலியுறுத்தி வீதி நாடகம் நடத்தப்பட்டது. அதில், கழிவறையை தூய்மையாக வைப்பது, இயற்கை முறை வேளாண்மை போன்ற கருத்துக்கள் இடம்பெற்றிருந்தன.
