கோவையில் பெண்ணின் இறப்புக்கு காரணமான காதலன் மற்றும் தோழி நடவடிக்கை கோரி மனு

கோவை: தாழ்த்தப்பட்ட பெண்ணின் இறப்புக்கு காரணமான காதலன் மற்றும் தோழி மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மக்கள் விடுதலை முன்னணியினர் கோவை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் புகார் மனு அளித்தனர்.

கோவை: தாழ்த்தப்பட்ட பெண்ணின் இறப்புக்கு காரணமான காதலன் மற்றும் தோழி மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மக்கள் விடுதலை முன்னணியினர் கோவை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் புகார் மனு அளித்தனர்.

வீரபாண்டி அறிவொளி நகரைச்சேர்ந்த சிவக்குமாரின் மகள் சந்தியா. இவர் பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது கோத்தகிரியைச் சேர்ந்த ஆசிப் என்பவரை காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இரு வீட்டாரும் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதனையடுத்து சந்தியாவின் தோழி கல்பனாவின் வீட்டில் வைத்து ஆசிப்பை சந்தித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் 7-ம் தேதி வேலைக்கு சென்றவர் வீடு திரும்பாததால், சந்தியாவின் பெற்றோர் ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் கடந்த ஜீன் 16-ம் தேதி புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், காரமடை காவல் துறையினர் மேட்டுப்பாளையம் நெல்லித்துரை அருகே சந்தியாவின் பிரேதத்தை கண்டுபிடித்துள்ளனர். 

சந்தியாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால், அவரது காதலன் ஆசிப் மற்றும் கல்பனாவிடம் உரிய விசாரணை நடத்தி கொலையாளிகளை கைது செய்யக்கோரி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மக்கள் விடுதலை முன்னணியின் சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்தனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...