கோவை : சான்றிதழ்கள் கல்லூரி நிர்வாகம் வழங்காததால் மேற்படிப்பு படிக்க முடியாத நிலை உள்ளதாக செவிலியர் பயிற்சி மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் வேதனையுடன் மனு அளித்தனர்.
கோவை : சான்றிதழ்கள் கல்லூரி நிர்வாகம் வழங்காததால் மேற்படிப்பு படிக்க முடியாத நிலை உள்ளதாக செவிலியர் பயிற்சி மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் வேதனையுடன் மனு அளித்தனர்.
மக்கள் குறை தீர்ப்பு நாளான இன்று பொள்ளாச்சி வட்டம் ஜமீன் கோட்டாம்பட்டியில் உள்ள 'சிவா பாரா மெடிக்கல்' கல்லூரியில் 2013-16 வரை மூன்றரை ஆண்டு செவிலியர் பட்டயப்படிப்பு பயின்ற முன்னாள் மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர்.
அதில் கூறியிருப்பதாவது :- கடந்த 2016-ம் ஜூலை மாதம் இறுதி தேர்வு எழுதிய மாணவர்களுக்கு செவிலியர் பயிற்சி முடித்ததற்கான சான்றிதழ்கள் மட்டும் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தனியார் மருத்துவமனையில் செய்முறை பயிற்சி பெற்றோம். தங்களது 10 மற்றும் 12-வது மதிப்பெண் சான்றிதழ்களை நிர்வாகம் தராமல் இழுத்தடிக்கின்றனர். இது குறித்து கேட்டால் முறையான தகவல்களை தர மறுப்பதால், தங்களது மேற்படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தக் கல்லூரியின் நிர்வாக இயக்குனராக இருந்த சிவா கல்லூரியைச் சுரபி ஜோதிமுருகன் என்பவர் வசம் ஒப்படைத்து விட்டனர். தற்போதைய நிர்வாகம் முறையாகப் பதில் அளிக்காமல் உள்ளதால் தங்கள் மேற்படிப்பு என்பது கேள்வி குறியாக உள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு கல்வி சான்றிதழ்களைப் பெற்று தர வேண்டும், இவ்வாறு அவர்கள் வலியுறுத்தினர்.
மக்கள் குறை தீர்ப்பு நாளான இன்று பொள்ளாச்சி வட்டம் ஜமீன் கோட்டாம்பட்டியில் உள்ள 'சிவா பாரா மெடிக்கல்' கல்லூரியில் 2013-16 வரை மூன்றரை ஆண்டு செவிலியர் பட்டயப்படிப்பு பயின்ற முன்னாள் மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர்.
அதில் கூறியிருப்பதாவது :- கடந்த 2016-ம் ஜூலை மாதம் இறுதி தேர்வு எழுதிய மாணவர்களுக்கு செவிலியர் பயிற்சி முடித்ததற்கான சான்றிதழ்கள் மட்டும் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தனியார் மருத்துவமனையில் செய்முறை பயிற்சி பெற்றோம். தங்களது 10 மற்றும் 12-வது மதிப்பெண் சான்றிதழ்களை நிர்வாகம் தராமல் இழுத்தடிக்கின்றனர். இது குறித்து கேட்டால் முறையான தகவல்களை தர மறுப்பதால், தங்களது மேற்படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தக் கல்லூரியின் நிர்வாக இயக்குனராக இருந்த சிவா கல்லூரியைச் சுரபி ஜோதிமுருகன் என்பவர் வசம் ஒப்படைத்து விட்டனர். தற்போதைய நிர்வாகம் முறையாகப் பதில் அளிக்காமல் உள்ளதால் தங்கள் மேற்படிப்பு என்பது கேள்வி குறியாக உள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு கல்வி சான்றிதழ்களைப் பெற்று தர வேண்டும், இவ்வாறு அவர்கள் வலியுறுத்தினர்.