டெல்லி: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பிறந்தநாளுக்கு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
டெல்லி: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பிறந்தநாளுக்கு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
பிரதமர் மோடி தனது வாழ்த்து செய்தியை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், "ஜனாதிபதியின் ஞானம் மற்றும் பல்வேறு விஷயங்களில் அவரது செயல்பாடுகளால் இந்தியா பெரிதும் பயனடைந்திருக்கிறது. நமது சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவிலும் அவர் இணைந்திருக்கிறார். அவர் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ நான் பிரார்த்தனை செய்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.

மதிப்பிற்குரிய ஜனாதிபதிக்கு கடவுள் நல்ல ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் வழங்க பிரார்த்தனை செய்வதாக நிதி அமைச்சர் அருண் ஜெட்லி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதேபோல், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் ஜனாதிபதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பூங்கொத்துடன் தனது வாழ்த்து கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
பிரதமர் மோடி தனது வாழ்த்து செய்தியை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், "ஜனாதிபதியின் ஞானம் மற்றும் பல்வேறு விஷயங்களில் அவரது செயல்பாடுகளால் இந்தியா பெரிதும் பயனடைந்திருக்கிறது. நமது சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவிலும் அவர் இணைந்திருக்கிறார். அவர் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ நான் பிரார்த்தனை செய்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.

மதிப்பிற்குரிய ஜனாதிபதிக்கு கடவுள் நல்ல ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் வழங்க பிரார்த்தனை செய்வதாக நிதி அமைச்சர் அருண் ஜெட்லி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதேபோல், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் ஜனாதிபதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பூங்கொத்துடன் தனது வாழ்த்து கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார்.