கோவை: மேற்குத்தொடர்ச்சி மலை திரைப்படத்தை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வரும் சூழலில், பரியேறும் பெருமாள் திரைப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என்று மேற்குத்தொடர்ச்சி மலை திரைப்படத்தின் இயக்குனர் லெனின் பாரதி தெரிவித்துள்ளார்.
கோவை: மேற்குத்தொடர்ச்சி மலை திரைப்படத்தை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வரும் சூழலில், பரியேறும் பெருமாள் திரைப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என்று மேற்குத்தொடர்ச்சி மலை திரைப்படத்தின் இயக்குனர் லெனின் பாரதி தெரிவித்துள்ளார்.
ஓசை தன்னார்வ அமைப்பு சித்தாப்புதூர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடத்திய மாதாந்திர சூழல் சந்திப்பில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் லெனின் பாரதி கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், "பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் இன்றைய கால கட்டத்தில் தமிழகத்தில் நிலவி வரும் சாதிய கட்டமைப்புகளை கட்டியுள்ளார்.

வரவிற்கும் வாரத்தில் மூன்று முறையாவது அந்த படத்தை பாருங்கள். ஒரு குறிப்பிட்ட சாதியை உயர்த்திப் பேசும் மற்றும் பெண்களை தவறான முறையில் சித்தரிக்கும் திரைப்படங்களை மக்கள் தவிர்க்க வேண்டும்.

இயக்குனர்களுக்கு சமூகத்தின் மீது அக்கறை இருக்க வேண்டும். பொழுதுபோக்கு என்கிற பெயரில் இயக்குனர்கள் மக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் படங்களை தயாரிக்க வேண்டாம். எனது திரைப்படத்திற்கு மேற்குத்தொடர்ச்சி மலையில் வாழும் மக்களுக்கு சிறப்பு காட்சி திரையிடப்பட்டது." என்றார்.

இந்த சந்திப்பில் எழுத்தாளர் புவியரசு, பாமரன், ஓவியர் ஜீவானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு உரையாடினர்.
ஓசை தன்னார்வ அமைப்பு சித்தாப்புதூர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடத்திய மாதாந்திர சூழல் சந்திப்பில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் லெனின் பாரதி கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், "பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் இன்றைய கால கட்டத்தில் தமிழகத்தில் நிலவி வரும் சாதிய கட்டமைப்புகளை கட்டியுள்ளார்.

வரவிற்கும் வாரத்தில் மூன்று முறையாவது அந்த படத்தை பாருங்கள். ஒரு குறிப்பிட்ட சாதியை உயர்த்திப் பேசும் மற்றும் பெண்களை தவறான முறையில் சித்தரிக்கும் திரைப்படங்களை மக்கள் தவிர்க்க வேண்டும்.

இயக்குனர்களுக்கு சமூகத்தின் மீது அக்கறை இருக்க வேண்டும். பொழுதுபோக்கு என்கிற பெயரில் இயக்குனர்கள் மக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் படங்களை தயாரிக்க வேண்டாம். எனது திரைப்படத்திற்கு மேற்குத்தொடர்ச்சி மலையில் வாழும் மக்களுக்கு சிறப்பு காட்சி திரையிடப்பட்டது." என்றார்.

இந்த சந்திப்பில் எழுத்தாளர் புவியரசு, பாமரன், ஓவியர் ஜீவானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு உரையாடினர்.