நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் இன்று காலை முதல் பரவலாக பெய்த மழையின் காரணமாக குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் லால்ஸ் பால்ஸ் பகுதியில் மரம் விழுந்து விபத்து ஏற்பட்டது.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் இன்று காலை முதல் பரவலாக பெய்த மழையின் காரணமாக குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் லால்ஸ் பால்ஸ் பகுதியில் மரம் விழுந்து விபத்து ஏற்பட்டது.
கடந்த சில நாட்களாக உதகை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பகல் நேரங்களில் வெயில் மற்றும் மேக மூட்டத்துடன் கூடிய இதமான காலநிலை நிலவி வந்தது. இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்து வந்த நிலையில், இன்று காலை முதல் உதகை, குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

இதன் காரணமாக குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் லால்ஸ் பால்ஸ் பகுதியில் ராட்சத மரம் விழுந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குன்னூர் தீயணைப்பு நிலைய பொறுப்பு அதிகாரி குமார் தலைமையிலான தீயணைப்புப்படை வீரர்கள் முரளி, சுப்ரமணி, கண்ணன், கதிரவன், ரஞ்சித் கொண்ட ஆகியோர் ஒரு மணி நேரம் போராடி ராட்சத மரத்தினை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர்.
இதனைத்தொடர்ந்து, போக்குவரத்து சீரானது. இன்று விடுமுறை நாள் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து இன்று உதகைக்கு சுற்றுலா வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
கடந்த சில நாட்களாக உதகை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பகல் நேரங்களில் வெயில் மற்றும் மேக மூட்டத்துடன் கூடிய இதமான காலநிலை நிலவி வந்தது. இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்து வந்த நிலையில், இன்று காலை முதல் உதகை, குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

இதன் காரணமாக குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் லால்ஸ் பால்ஸ் பகுதியில் ராட்சத மரம் விழுந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குன்னூர் தீயணைப்பு நிலைய பொறுப்பு அதிகாரி குமார் தலைமையிலான தீயணைப்புப்படை வீரர்கள் முரளி, சுப்ரமணி, கண்ணன், கதிரவன், ரஞ்சித் கொண்ட ஆகியோர் ஒரு மணி நேரம் போராடி ராட்சத மரத்தினை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர்.
இதனைத்தொடர்ந்து, போக்குவரத்து சீரானது. இன்று விடுமுறை நாள் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து இன்று உதகைக்கு சுற்றுலா வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.