திருப்பூரில் பொது மக்களின் கவனத்தை திசை திருப்பி கொள்ளையில் ஈடுபட்ட 3 பேர் கைது

திருப்பூர்: திருப்பூரில் பொது மக்களின் கவனத்தை திசை திருப்பி கொள்ளையில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 30 1/2 சவரன் நகை மற்றும் ரூ.1 லட்சத்து 68 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.


திருப்பூர்: திருப்பூரில் பொது மக்களின் கவனத்தை திசை திருப்பி கொள்ளையில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 30 1/2 சவரன் நகை மற்றும் ரூ.1 லட்சத்து 68 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

திருப்பூர் பெருமாள் கோவிலுக்கு காரில் வந்த தம்பதியினரின் கவனத்தை திசை திருப்பி அவர்கள் காரில் வைத்திருந்த 15 சவரன் நகை கொள்ளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். அதே போல் ஈஸ்வரன் கோவில் பகுதியில் செந்தில் என்பவரிடமிருந்து ரூ.1 லட்சத்து 68 ஆயிரம் பணமும், தென்னம்பாளையம் பகுதியைச் சேர்ந்த நாகாத்தால் என்ற மூதாட்டி மீது அரிப்பு பொடி தூவி 7 சவரன் நகையும் கொள்ளையடிக்கப்பட்டது.



இப்படியாக தொடர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட நகை பறிப்பு கொள்ளையர்களைப் பிடிக்க திருப்பூர் காவல்துறையினர் தனிப்படை அமைத்தனர். இந்த நிலையில், திருப்பூர் சிடிசி சாலையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர்கள் மூன்று பேரும் தெற்கு காவல் நிலையம் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் பொது மக்களின் கவனத்தை திசை திருப்பி கொள்ளையில் ஈடுபட்டு வந்ததோடு, சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கார்களில் உள்ளிருக்கும் மடிக்கணினி, பணம் என கடந்த 8 மாதங்களாக கொள்ளையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, கொள்ளையில் ஈடுபட்டு வந்த திருச்சி ராம்ஜீ நகரைச் சேர்ந்த கிரிநாதன், பிரசாத், அஷார் அலி ஆகிய மூன்று பேரை தெற்கு போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 30 1/2 சவரன் நகை மற்றும் ரூ.1 லட்சத்து 68 ஆயிரம் பணத்தை பரிமுதல் செய்து, மூவரையும் சிறையில் அடைத்தனர்

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...