அமராவதி ஆற்றின் கரையோரங்களில் பனை விதைகளை நடவு செய்யும் இளைஞர்கள்

திருப்பூர்: உடுமலை அருகே கணியூரில் மழை தன்னார்வ அமைப்பு மற்றும் இளைஞர்கள் சார்பில் பனை மரம் நடும் விழாவை சட்டமன்ற உறுப்பினர் இரா.ஜெயராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.


திருப்பூர்: உடுமலை அருகே கணியூரில் மழை தன்னார்வ அமைப்பு மற்றும் இளைஞர்கள் சார்பில் பனை மரம் நடும் விழாவை சட்டமன்ற உறுப்பினர் இரா.ஜெயராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கணியூரில் மழை அமைப்பு மற்றும் இளைஞர்கள் சார்பில் 60 லட்சம் பனை மரங்களை வளர்க்கும் முயற்சியாக, அமராவதி ஆற்றின் கரையோர பகுதிகள் மற்றும் வாய்க்கால் குளங்கள் உள்ளிட்ட நீர்நிலை பகுதிகளில் பனைமர கன்றுகள் நடவு செய்ய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் இளைஞர்கள் முயற்சி மேற்கொண்டனர்.



நிலத்தடி நீரை புத்துயிர் பெற வைக்கும் நோக்கில் செயல்பட்ட தன்னார்வலர்கள், ஒவ்வொரு கிராமங்களிலும் இளைஞர்கள் உதவியுடன் பனைமரம் நடும் விழாவை இன்று நடத்தினர். இந்த நிகழ்ச்சியை மடத்துக்குளம் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் இரா.ஜெயராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். உடன் ஏராளமான இளைஞர்கள் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

ஞாயிற்றுக்கிழமை தோறும் ஒரு கிராமம் தேர்வு செய்யப்பட்டு பனைமர கன்று நடும் விழா தொடர்ந்து நடைபெறவுள்ளதாகத் தன்னார்வலர்கள் தெரிவித்தனர். நவீன விவசாயம் என்ற பெயரில் இயற்கையை அழித்து செயற்கையை உருவாக்கியதன் விளைவு மரங்கள் வெட்டப்பட்டு மழை இல்லாமல் வறட்சியை நோக்கி மக்களை கொண்டு சென்றுள்ளது எனவே நவீன விவசாயத்தை ஒழித்து இயற்கை முறையிலான விவசாயத்தை முன்னெடுக்க பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அவர்கள் உறுதி ஏற்றுக் கொண்டனர்.



Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...