கோவில் கட்டண பார்க்கிங்கில் தனிநபரின் அடாவடி வசூலுக்கு துணைபோகும் காவல்துறை : பொதுமக்களின் போராட்டத்தால் பரபரப்பு

திருப்பூர் : உடுமலை அருகே உள்ள கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் தனிநபருக்கு உடந்தையாக காவல்துறையினர் செயல்படுவதாகக் கூறி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் போராட்டம் நடத்தினர்.

திருப்பூர் : உடுமலை அருகே உள்ள கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் தனிநபருக்கு உடந்தையாக காவல்துறையினர் செயல்படுவதாகக் கூறி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் போராட்டம் நடத்தினர். 



திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி வனப்பகுதியில் ஏழுமலையான் கோவில் அமைந்துள்ளது. இங்கு புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் ஏராளமான பொதுமக்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். வருவாய்த்துறை, வனத்துறை மற்றும் காவல்துறையினர் இணைந்து கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவற்காக வனத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆண்டுதோறும் வாகன நிறுத்துமிடத்தை உருவாக்கி வருகின்றனர்.

ஆனால், தற்போது, தனியார் இடத்தில் வாகனங்கள் நிறுத்தி கட்டணம் செலுத்த காவல்துறையினர் வற்புறுத்துவதாகவும், அரசுக்கு சொந்தமாக பல இலட்சம் ஏக்கர் நிலங்கள் அப்பகுதியில் உள்ளபோது, தனியார் நிலத்தில் கட்டணம் செலுத்த காவல்துறையினர் ஏன் மக்களை மிரட்ட வேண்டும் என்று கூறி உடுமலையைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் சத்தியவாணி வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். 

பொதுமக்களும் அவருடன் சேர்ந்து கேள்வி எழுப்பியதால், காவல்துறை அனுமதியுடன் தான் தனிநபர் கட்டணம் வசூலிப்பதாக ஆய்வாளர் சிவக்குமார் கூறினார். இதைத் தொடர்ந்து, போலீசாரின் நடவடிக்கையைக் கண்டித்து பொதுமக்கள் வாக்குவாதம் செய்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து தடைபட்டது. பின்னர், உடுமலை வட்டாச்சியா் தங்கவேலுவைத் தொடர்புகொண்டு கேட்ட போது, காவல்துறையினர் தன்னிச்சையாக முடிவு செய்து கட்டணம் வசூலிப்பதாகவும், இது தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிப்பதாகவும் கூறினார். 



இன்று காலை 12 மணியளவில் மட்டும் 1,500 வாகனங்களுக்குக் கட்டணமாக ரூ. 45,000-த்தை வாகன நிறுத்துவதற்கான கட்டணமாக அந்த தனிநபர் வருமானம் ஈட்டியுள்ளார். ஒரு தினம் கூட முடிவடையாத நிலையில், இவ்வளவு வருமானம் ஈட்டும் இந்தக் கட்டண பார்க்கிங்கை அரசிடமே வைத்திருந்தால், பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு பார்க்கிங் மூலம் கிடைக்கும் தொகையைப் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால், அரசுக்கு வரும் வருமானத்தை போலீசார் தனிநபருக்கு தாரை வார்க்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது. 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...