சரவணம்பட்டி கனரா வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தில் வாடிக்கையாளர்களின் தகவல்களை திருட நூதன முயற்சி : சைபர் கிரைம் போலீசார் ஆய்வு

கோவை : சரவணம்பட்டியில் உள்ள கனரா வங்கியின் ஏ.டி.எம் இயந்திரத்தில் வாடிக்கையாளர்களின் தகவல்களை திருட ஸ்கிம்மர் இயந்திரம் பொருத்தப்பட்டது தொடர்பாக சி.சி.டி.வி. காட்சிகளைக் கொண்டு சைபர் கிரைம் போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை : சரவணம்பட்டியில் உள்ள கனரா வங்கியின் ஏ.டி.எம் இயந்திரத்தில் வாடிக்கையாளர்களின் தகவல்களை திருட ஸ்கிம்மர் இயந்திரம் பொருத்தப்பட்டது தொடர்பாக சி.சி.டி.வி. காட்சிகளைக் கொண்டு சைபர் கிரைம் போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

சரவணம்பட்டி விசுவாசபுரம் பகுதியில் கனரா வங்கி உள்ளது. அந்த வங்கியின் அருகிலேயே அந்த வங்கிக்கான ஏ.டி.எம். இயந்திரம் செயல்பட்டு வருகிறது. இந்த ஏ.டி.எம். இயந்திரத்தில் அடையாளம் தெரியாத சிலர் வாடிக்கையாளர்களின் தகவல்களை திருட ஸ்கிம்மர் இயந்திரத்தினை பொருத்தியுள்ளது தெரியவந்துள்ளது. இன்று காலை வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுக்க கனரா வங்கி ஏ.டி.எம். வந்த போது, ஏ.டி.எம். இயந்திரத்தில் கார்டு சொருகும் பகுதி வித்தியாசமாக இருந்ததால் உடனடியாக கனரா வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில், கனரா வங்கி அதிகாரிகள் ஏ.டி.எம். மையத்திற்கு வந்து ஆய்வு செய்த போது, வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடுவதற்காக

ஸ்கிம்மர் இயந்திரத்தினை பொருத்தி சென்று இருப்பது தெரியவந்தது.

பின்னர், வங்கி அதிகாரிகள் உடனடியாக சரவணம்பட்டி காவல் நிலையத்திற்குப் புகார் அளித்தனர். இதனையடுத்து, ஸ்கிம்மர் இயந்திரத்தை பொருத்தியது யார் என்பது குறித்து ஏ.டி.எம். மையத்தில் பதிவாகியுள்ள சி.சி.டி.வி., காட்சிகளைக் கொண்டு சரவணம்பட்டி காவல் துறையினரும், சைபர்கிரைம் போலீசாரும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஸ்கிம்மர் இயந்திரத்தைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து பணத்தை திருடிய கும்பலை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், தற்போது வாடிக்கையாளர்களின் தகவல்களை திருட மீண்டும் ஏ.டி.எம். மையத்தில் ஸ்கிம்மர் இயந்திரம் பொருத்தப்பட்டு இருப்பது வங்கி அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கோவை மாநகர போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...