கோவை : கன மழையின் காரணமாக கோவை - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வீரபாண்டி பிரிவில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோவை : கன மழையின் காரணமாக கோவை - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வீரபாண்டி பிரிவில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோவை மாவட்டத்தில் பல பகுதிகளில் கடந்த இரு தினங்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனிடையே, இன்று மாலை பெய்த கனமழையின் காரணமாக வீரபாண்டி பிரிவில், கோவை - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் புளியமரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது.

இதனால், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதன்பின், ஜே.சி.பி. வாகன உதவியுடன் மரம் அகற்றப்பட்டு போக்குவரத்து சீரானது. இந்த சம்பவத்தின் போது, மரம் கிளை கோவை நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்றின் மீது விழுந்தது. இதில், அந்த காரில் பயணம் செய்தவர்கள் காயம் இன்றி உயிர் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை மாவட்டத்தில் பல பகுதிகளில் கடந்த இரு தினங்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனிடையே, இன்று மாலை பெய்த கனமழையின் காரணமாக வீரபாண்டி பிரிவில், கோவை - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் புளியமரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது.

இதனால், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதன்பின், ஜே.சி.பி. வாகன உதவியுடன் மரம் அகற்றப்பட்டு போக்குவரத்து சீரானது. இந்த சம்பவத்தின் போது, மரம் கிளை கோவை நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்றின் மீது விழுந்தது. இதில், அந்த காரில் பயணம் செய்தவர்கள் காயம் இன்றி உயிர் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.