உதகையில் தூய்மை இந்தியா திட்டம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் தூய்மை ரத வாகன யாத்திரை தொடக்கம்

உதகையில் தூய்மை இந்தியா திட்டம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் தூய்மை ரத வாகன யாத்திரை தொடக்கம்

நீலகிரி : மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக மாவட்ட மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தூய்மை ரத வாகன யாத்திரை இன்று தொடங்கியது.

தமிழக அரசின் முதன்மைசெயலரும், உணவு பாதுகாப்புத் துறை ஆணையருமான அமுதா உதகை காந்தல் பகுதியில் தூய்மை ரத வாகன இயக்கத்தை தொடங்கி வைத்தார். மாவட்டத்திலுள்ள 35 ஊராட்சிகளுக்கு செல்லும் இந்த தூய்மை ரதம், வரும் 2-ந் தேதி வரை தூய்மை இந்தியா திட்டத்தின் பயன்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் என்று மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறினார். 



இதைதொடர்ந்து, செய்தியாளர்களிடம் உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் அமுதா பேசியதாவது :- தமிழகம் பல்வேறு துறைகளில் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்வதிலும் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறது. இதிலும், குறிப்பாக, நீலகிரி மாவட்டம் தமிழகத்தில் பிளாஸ்டிக் இல்லாத முன் மாதிரி மாவட்டமாக இருக்கிறது. நாகரீகம் என்ற பெயரில் கடந்த 25 ஆண்டுகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது. 

வரும் 2019 ஜனவரி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளதையடுத்து, அதற்குப் பதிலாக மக்காச்சோளக் கழிவு, மரவள்ளி கிழங்குக் கழிவு, கரும்பு சக்கையிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மாற்றுப் பொருட்களை வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்த முன் வர வேண்டும், என்றார். 

மேலும், மாநிலத்தில் ஆங்காங்கே தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வது குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், "தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்கப்படுவது, பதுக்கி வைப்பது குறித்த தகவல் கிடைத்தால் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும்," எனக் கூறினார். 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...