நவம்பர் முதல் தமிழகத்தில் உள்ள கருவூலகங்களை கணினி மூலம் ஒருங்கிணைத்து செயல்படும் திட்டம் அமல்

நீலகிரி : இந்தியாவில் முதன்முறையாக தமிழகத்தில் உள்ள கருவூலகங்களை கணினி மூலம் ஒருங்கிணைத்து செயல்படும் திட்டம் நவம்பர் முதல் தொடங்குவதாக தமிழக கருவூலம் மற்றும் கணக்குத் துறை முதன்மை செயலர் தென்காசி ஜவஹர் அறிவித்துள்ளார்.

நீலகிரி : இந்தியாவில் முதன்முறையாக தமிழகத்தில் உள்ள கருவூலகங்களை கணினி மூலம் ஒருங்கிணைத்து செயல்படும் திட்டம் நவம்பர் முதல் தொடங்குவதாக தமிழக கருவூலம் மற்றும் கணக்குத் துறை முதன்மை செயலர் தென்காசி ஜவஹர் அறிவித்துள்ளார்.

உதகையில் கருவூல பணிகளை மேம்படுத்தும் பொருட்டு ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டக் கூட்டம் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்றது. இதில், தமிழக கருவூல மற்றும் கணக்குத்துறை முதன்மை செயலர் ஜவஹர் கலந்து கொண்டார்.



கூட்டத்தில் அவர் கூறியதாவது :- தமிழகத்தில் 293 கருவூலங்கள் உள்ளன. இதில், 29,000 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். தமிழகத்தில் உள்ள 9 லட்சம் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதும், 7 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு பென்சன் தொகை வழங்குவதும் இவர்களது பணியாகும். கடந்த 2017-18 ஆண்டில் ரூ. 1,76,000 கோடியை கருவூலம் கையாண்டுள்ளது. கருவூலங்கள் கணினி மயமாக்கி ஒருங்கிணைக்காததால் பணிகள் மெதுவாக நடைபெறுகிறது. இதற்காகத்தான் மாநிலம் முழுவதும் ஒருங்கிணைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.



இதன்மூலம், ஒரு வாரம் நடைபெறும் பணி அரைமணி நேரத்தில் முடிந்துவிடும். ஊழியர்கள் கேட்கும் பிஎஃப், டி.ஏ., போன்ற பணப்பலன்கள் காலையில் இரசிது கொடுத்தால், மாலையில் பணம் கிடைக்கும் வகையில் பணி வேகமாக இருக்கும். உங்கள் கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்பது குறித்து உடனடியாக எஸ்.எம்.எஸ்., வரும். இப்போது, கருவூல ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அக்டோபர் மாதம் இப்பணி முடிவடைந்துவிடும். நவம்பர் மாதம் முதல் இந்தியாவில் முதன்முறையாக தமிழக கருவூலம் கணினி மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு விடும், இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...