கோவை : சேதாரத் தங்கம் வாங்கும் பட்டறையாளர்கள் மீது திருட்டு தங்கம் வாங்கியதாக செட்டிபாளையம் காவல் உதவி ஆய்வாளர் பொய் வழக்கு பதிவு செய்வதாகக் கூறி பட்டறை உரிமையாளர் சங்கத்தினர் காவல் கண்காணிப்பாளிரிடம் புகார் மனு அளித்தனர்.
கோவை : சேதாரத் தங்கம் வாங்கும் பட்டறையாளர்கள் மீது திருட்டு தங்கம் வாங்கியதாக செட்டிபாளையம் காவல் உதவி ஆய்வாளர் பொய் வழக்கு பதிவு செய்வதாகக் கூறி பட்டறை உரிமையாளர் சங்கத்தினர் காவல் கண்காணிப்பாளிரிடம் புகார் மனு அளித்தனர்.
கோவை மாவட்ட பட்டறை உரிமையாளர்கள் சங்கத்தினர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். அதில், பட்டறைகளில் பணியாற்றுவர்களிடமிருந்து சேதார தங்கம் வாங்கும் தங்கள் சங்கத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவரை திருட்டு தங்கம் வாங்கியதாகப் பொய் வழக்கில் செட்டிபாளையம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் பிராங்க்ளின் கடந்த 23-ம் தேதி உரிய தகவல் அளிக்காமல் கைது செய்துள்ளனர். எந்த தவறும் செய்யாத தினேஷ் மீது பொய் சாட்சிகளின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அதேபோல, குடும்பத்தினரிடமிருந்து பிராங்க்ளின் 25 சவரன் தங்கத்தை பெற்றுக்கொண்ட பின்னரும், பொய் வழக்கு போட்டு அலைக்கழிக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளர் பிராங்க்ளின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு, அவர் மீது துறை ரீதியான விசாரணை நடத்த வேண்டும். திருட்டு தங்கம் வாங்கி விற்பனை செய்யும் வெங்கடேஷ் என்பவரை பொய்யாக சாட்சி சொல்லுமாறு உதவி ஆய்வாளர் மிரட்டியுள்ளார். மேலும், தினேஷை மிரட்டி தங்கத்தையும் பறித்துள்ளனர், இவ்வாறு அந்தப் புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.