கோவை: காரமடை அருகே பட்ட பகலில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்த மர்ம நபர்கள் 19 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூபாய் ஒரு லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
கோவை: காரமடை அருகே பட்ட பகலில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்த மர்ம நபர்கள் 19 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூபாய் ஒரு லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

காரமடையில் உள்ள மூனுகட்டியூர் பகுதியில் வசித்து வருபவர் கோபால்சாமி. அதே பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இவர் இன்று காலை தனது வீட்டைப் பூட்டி விட்டு, தனது குடும்பத்துடன் உறவினர் வீட்டு விஷேச நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார்.
பின்னர், மாலையில் வீடு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டிருநதத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 19 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

மேலும், கோபால்சாமியின் வீட்டின் அருகே உள்ள அவரது சகோதரர் வீட்டின் கதவு இதே போல் உடைக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த வீட்டில் எந்த பொருட்களும் கொள்ளையடிக்கப்படவில்லை. இதனை அடுத்து கோபால்சாமி காரமடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது தொடர்பாக, வழக்குப் பதிவு செய்த போலீசார் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

காரமடையில் உள்ள மூனுகட்டியூர் பகுதியில் வசித்து வருபவர் கோபால்சாமி. அதே பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இவர் இன்று காலை தனது வீட்டைப் பூட்டி விட்டு, தனது குடும்பத்துடன் உறவினர் வீட்டு விஷேச நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார்.
பின்னர், மாலையில் வீடு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டிருநதத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 19 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

மேலும், கோபால்சாமியின் வீட்டின் அருகே உள்ள அவரது சகோதரர் வீட்டின் கதவு இதே போல் உடைக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த வீட்டில் எந்த பொருட்களும் கொள்ளையடிக்கப்படவில்லை. இதனை அடுத்து கோபால்சாமி காரமடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது தொடர்பாக, வழக்குப் பதிவு செய்த போலீசார் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.