கோவை: கேலி சித்திரமாக பிரதமர் மோடியின் படத்தை விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில் நுட்ப பிரிவின் தலைவர் திவ்யாஸ் பந்தனாஸ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
கோவை: கேலி சித்திரமாக பிரதமர் மோடியின் படத்தை விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில் நுட்ப பிரிவின் தலைவர் திவ்யாஸ் பந்தனாஸ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில் நுட்ப பிரிவின் தலைவரும், கர்நாடகாவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான திவ்யாஸ் பந்தனாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியை தவறான முறையில் சித்தரித்து கேலி சித்திரம் வெளியிட்டுள்ளார்.

நாட்டின் பிரதமரை தவறான முறையிலும், இழிவான முறையிலும் விமர்சித்த செயலை பாரதிய ஜனதா கட்சியினர் கண்டித்து வருகின்றனர். இந்நிலையில், திவ்யாஸ் பந்தனாஸ் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாநகர சைபர் கிராம் போலீசாரிடம், பா.ஜ.க மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் புகார் மனு அளித்துள்ளார்.
முக்கிய பதவியில் வகிக்கும் நாட்டின் பிரதமரை இழிவாக சித்தரித்தது கண்டிக்கத்தக்கது எனவும், கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இதுபோன்ற செயல்கள் செய்வதை ஏற்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில் நுட்ப பிரிவின் தலைவரும், கர்நாடகாவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான திவ்யாஸ் பந்தனாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியை தவறான முறையில் சித்தரித்து கேலி சித்திரம் வெளியிட்டுள்ளார்.

நாட்டின் பிரதமரை தவறான முறையிலும், இழிவான முறையிலும் விமர்சித்த செயலை பாரதிய ஜனதா கட்சியினர் கண்டித்து வருகின்றனர். இந்நிலையில், திவ்யாஸ் பந்தனாஸ் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாநகர சைபர் கிராம் போலீசாரிடம், பா.ஜ.க மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் புகார் மனு அளித்துள்ளார்.
முக்கிய பதவியில் வகிக்கும் நாட்டின் பிரதமரை இழிவாக சித்தரித்தது கண்டிக்கத்தக்கது எனவும், கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இதுபோன்ற செயல்கள் செய்வதை ஏற்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.