திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்களால் வழங்கப்பட்ட 195 உறுதிமொழிகள் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்ததாகவும், அவை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு 126 உறுதிமொழிகளுக்கு தீர்வு காணப்பட்டதாகவும் உறுதிமொழி ஆய்வுக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்களால் வழங்கப்பட்ட 195 உறுதிமொழிகள் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்ததாகவும், அவை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு 126 உறுதிமொழிகளுக்கு தீர்வு காணப்பட்டதாகவும் உறுதிமொழி ஆய்வுக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் உறுதிமொழி ஆய்வுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் உறுதிமொழி ஆய்வுக்குழுவில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள், திருப்பூர் மாவட்ட தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஆய்வுக்குழு கூட்டத்திற்கு பின் ஆய்வுக்குழு தலைவர் இன்பத்துரை செய்தியாளர்களிடம் பேசுகையில், "சட்டமன்ற உறுதிமொழி ஆய்வுக்குழு சட்டப்பேரவையில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கொடுத்த உறுதிமொழிகள் நடைமுறைப்படுத்தப்படுவது குறித்து மாவட்டம் தோறும் ஆய்வு மேற்கொள்ளப்படும். அதனடிப்படையில், திருப்பூரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 195 உறுதிமொழிகள் நிலுவையில் இருந்தன.
அவை 7.15 மணி நேரமாக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, அதில் 126 உறுதிமொழிகளுக்கு தீர்வு காணப்பட்டது. மீதமுள்ளவற்றுக்கு விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அவிநாசி-அவிநாசிபாளையம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்படும் போது கழிவு நீர் செல்ல வழி இல்லை என திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் கூறியதையடுத்து, மாவட்ட ஆட்சியர் ஒரு வாரத்திற்குள் ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்." என்று அவர் பேசினார்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் உறுதிமொழி ஆய்வுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் உறுதிமொழி ஆய்வுக்குழுவில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள், திருப்பூர் மாவட்ட தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஆய்வுக்குழு கூட்டத்திற்கு பின் ஆய்வுக்குழு தலைவர் இன்பத்துரை செய்தியாளர்களிடம் பேசுகையில், "சட்டமன்ற உறுதிமொழி ஆய்வுக்குழு சட்டப்பேரவையில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கொடுத்த உறுதிமொழிகள் நடைமுறைப்படுத்தப்படுவது குறித்து மாவட்டம் தோறும் ஆய்வு மேற்கொள்ளப்படும். அதனடிப்படையில், திருப்பூரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 195 உறுதிமொழிகள் நிலுவையில் இருந்தன.
அவை 7.15 மணி நேரமாக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, அதில் 126 உறுதிமொழிகளுக்கு தீர்வு காணப்பட்டது. மீதமுள்ளவற்றுக்கு விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அவிநாசி-அவிநாசிபாளையம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்படும் போது கழிவு நீர் செல்ல வழி இல்லை என திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் கூறியதையடுத்து, மாவட்ட ஆட்சியர் ஒரு வாரத்திற்குள் ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்." என்று அவர் பேசினார்.
