கோவை: டாஸ்மாக் கடையின் மேற்கூரையை பிரித்து பணத்தை திருடிச்சென்ற வழக்கில் டாஸ்மாக் விற்பனையாளர் உள்பட இருவருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோவை: டாஸ்மாக் கடையின் மேற்கூரையை பிரித்து பணத்தை திருடிச்சென்ற வழக்கில் டாஸ்மாக் விற்பனையாளர் உள்பட இருவருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
காந்திபுரம் ஜி.பி சிக்னல் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கடையின் மேற்கூரையை பிரித்து உள்ளே இறங்கி கடையினுள் வைக்கப்பட்டிருந்த ரூ.5.3 லட்சத்தை மர்ப நபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து டாஸ்மாக் மண்டல மேலாளர் அளித்த புகாரின் பேரில் கோவை ரத்தினபுரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், பணத்தை திருடியதாக அதே கடையில் விற்பனையாளராக பணியாற்றிய நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ரவீந்திரன் (37), டாஸ்மாக் கடை உடன் இணைக்கப்பட்ட மதுபான கூடத்தில் சப்ளையராக பணியாற்றி வந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார் (37), ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை கோவை 2-வது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஞானசம்பந்தம் இருவருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
காந்திபுரம் ஜி.பி சிக்னல் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கடையின் மேற்கூரையை பிரித்து உள்ளே இறங்கி கடையினுள் வைக்கப்பட்டிருந்த ரூ.5.3 லட்சத்தை மர்ப நபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து டாஸ்மாக் மண்டல மேலாளர் அளித்த புகாரின் பேரில் கோவை ரத்தினபுரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், பணத்தை திருடியதாக அதே கடையில் விற்பனையாளராக பணியாற்றிய நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ரவீந்திரன் (37), டாஸ்மாக் கடை உடன் இணைக்கப்பட்ட மதுபான கூடத்தில் சப்ளையராக பணியாற்றி வந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார் (37), ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை கோவை 2-வது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஞானசம்பந்தம் இருவருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.