கோவை: கோவை மாநகர காவல்துறையில் பணி புரியும் பெண் போலீஸ் மீதான கடன் புகார் குறித்து விசாரிக்க செட்டிபாளையம் போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கோவை: கோவை மாநகர காவல்துறையில் பணி புரியும் பெண் போலீஸ் மீதான கடன் புகார் குறித்து விசாரிக்க செட்டிபாளையம் போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பகுதியை சேர்ந்தவர் லோகநாதன். இவரிடம் சத்திரம் வீதியில் வசித்து வரும் கோவை மாநகர போலீசில் பணி புரியும் அம்சவேணி (33) பல தவணைகளாக ரூபாய் 6 லட்சம் வரை பெற்றுள்ளார். இவர் லோகநாதனின் தாயார் நடத்தும் மாத சீட்டிலும் சேர்ந்து சீட்டுத் தொகை பெற்றுள்ளதாக தெரிகிறது.
இந்தநிலையில், அம்சவேணியிடம் லோகநாதன் பணம் வாங்கிய நாட்கள் அதிகரித்ததை தொடர்ந்து தொகையை பல முறை கேட்டுள்ளார். ஆனால், முறையான பதில் வராததால் கோவை மாநகர காவல் உதவி ஆணையரிடம் (தெற்குப்பகுதி குற்றப்பிரிவு) புகார் கொடுத்தார்.
இதில் விசாரணைக்குப்பின் 4 லட்ச ரூபாயை அம்சவேணி கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளார். இதில் அம்சவேணி கொடுத்த காசோலைகள் பணமின்றி திரும்பியது. இதனால் லோகநாதன் கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி அவர் மீதுள்ள கடன் சம்பந்தமான புகாரை விசாரித்து நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்க செட்டிபாளையம் போலீசாருக்கு உத்தரவிட்டார்.