நீலகிரி : நீலகிரி மாவட்டம் மஞ்சூர் முள்ளி மலை பாதையில் அரசு பேருந்தை வழி மறித்த காட்டு யானைகளால் பயணிகள் பீதியடைந்தனர்.
நீலகிரி : நீலகிரி மாவட்டம் மஞ்சூர் முள்ளி மலை பாதையில் அரசு பேருந்தை வழி மறித்த காட்டு யானைகளால் பயணிகள் பீதியடைந்தனர்.
மஞ்சூரில் இருந்து புறப்பட்டு முள்ளி வழியாக கோவை சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை மாலை நேரத்தில் யானைகள் கூட்டம் வழி மறித்தது. சுமார் முக்கால் மணி நேரத்திற்குப் பின் இவை தானாக வனப்பகுதிக்குள் சென்றதால் பேருந்து பணிகள் நிம்மதி அடைந்தனர். , இந்த
மஞ்சூர் - முள்ளி சாலையின் ஓரத்தில் வனப்பகுதிகள் நிறைந்து காணப்படுகின்றன. இந்த சாலை வழியாக கேரளா, கோவை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அதிகளவில் வாகனங்கள் வந்து செல்கின்றன. கடந்த பல வாரங்களாக பெய்து வந்த மழையின் காரணமாக சாலை ஓரங்களில் அதிகளவில் புற்கள் வளர்ந்து பசுமையாக காட்சி அளிக்கின்றன. இதனை உட்கொள்ள இப்பகுதிகளில் உள்ள யானைகள் கூட்டம், கூட்டமாக சாலைகளுக்கு வந்த வண்ணம் உள்ளன. இதனால், வாகனங்களைப் பாதுகாப்பாக இயக்க வனத்துறை அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், மஞ்சூரிலிருந்து முள்ளி வழியாக அரசு பேருந்து ஒன்று கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, சாலையில் காட்டு யானைகள் கூட்டமாக பேருந்திற்கு வழிவிடாமல் நின்று கொண்டிருந்தன. சுமார் 45 நிமிடங்கள் சாலையில் நின்று விட்டு வனப்பகுதிக்குள் மீண்டும் திரும்பின. இதனையடுத்து, ஒட்டுநர் அங்கிருந்து பேருந்தை இயக்கினார். யானைகள் வழிமறித்ததால் பீதியடைந்த பயணிகள், அவை அமைதியாக மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றதால் நிம்மதி அடைந்தனர்.