கோவை : செல்வபுரம் பகுதியில் அமைச்சர் பெயருடன் இருந்த பேனரை கிழித்த சம்பவம் தொடர்பாக தி.மு.க.,வை சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
கோவை : செல்வபுரம் பகுதியில் அமைச்சர் பெயருடன் இருந்த பேனரை கிழித்த சம்பவம் தொடர்பாக தி.மு.க.,வை சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
செல்வபுரம் முத்துச்சாமி காலனி பகுதியைச் சேர்ந்த துரையின் மகன் விக்னேஷ் (24). இவர் செல்வபுரம் பகுதியில் தி.மு.க.,வில் உறுப்பினராக உள்ளார். இவர் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு செல்வபுரம் பகுதியில் அமைச்சர் எஸ்.பி., வேலுமணியின் புகைப்படம் அடங்கிய அ.தி.மு.க.,வின் சுவரொட்டியைக் கிழித்துள்ளார். இந்தக் காட்சி அருகே இருந்த சி.சி.டி.வி.,யில் பதிவாகியிருந்தது.
இந்த நிலையில், அந்த இளைஞர் மீது அ.தி.மு.க., நிர்வாகி குமார் (35) என்பவர் செல்வபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், போலீசார் போஸ்டரை கிழித்த விக்னேஷை இன்று கைது செய்து காவல்நிலையத்தில் வைத்துள்ளனர். மேலும், அவர் மீது 294/b ,427 ,மற்றும் 506 ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.