கோவையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தில் கோடிக்கணக்கில் பணம் கையாடல் : கணக்காளரிடம் போலீசார் விசாரணை

கோவை: கோவையில் உள்ள டிராபிகானா நிட்டிங் என்ற நிறுவனத்தில் பணிபுரியும் கணக்காளர் தனது நிறுவனத்தில் இருந்து கோடிக்கணக்கான ரூபாயை கையாடல் செய்துள்ள சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை: கோவையில் உள்ள டிராபிகானா நிட்டிங் என்ற நிறுவனத்தில் பணிபுரியும் கணக்காளர் தனது நிறுவனத்தில் இருந்து கோடிக்கணக்கான ரூபாயை கையாடல் செய்துள்ள சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

துடியலூரில் டிராபிகானா நிட்டிங் என்ற தனியார் பனியன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு இருகூரைச் சேர்ந்த உதயநிதி (31), என்பவர் கணக்காளராக பணியாற்றி வந்தார். இவர் ரெடிமேடு உற்பத்திக்காக மூலப்பொருள்கள் வாங்கியதற்கு பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு இந்த தொழிற்சாலை சார்பில் வங்கிகள் மூலம் பணம் அனுப்பும் பொறுப்பை கவனித்து வந்தார். 

அப்போது அவர் பனியன் தொழிற்சாலைக்கு சொந்தமான சுமார் ஒரு கோடியே ஒரு லட்சத்தை தனது வங்கி கணக்கிலும், உறவினர்களின் வங்கிக் கணக்கிலும் சேர்த்து கையாடல் செய்ததாக புகார் எழுந்தது.

இந்த மோசடி குறித்து கணக்காளர் மீது பனியன் தொழிற்சாலை அதிகாரி சக்தி கோவை மாவட்ட குற்றப் பிரிவு போலீசில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து, மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்து கணக்காளர் உதயநிதியிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இவரது மோசடி குற்றத்திற்கு துணை இருந்தவர்களையும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...