கோவை: கோவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தலைவர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தலைவர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நம்மிடம் கூறுகையில், "கோவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஆனைமலை முதல் கவுண்டம்பாளையம் வரையிலான வட்டாரங்களில் தூரல் மழைக்கு வாய்ப்புள்ளது.
அதே போல் சூலூர், சுல்தான்பேட்டை, பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, மதுக்கரை, தொண்டாமுத்தூர் பகுதிகளில் பரவலான மழை எதிர்பார்க்கலாம்.
மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நல்ல மழை எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக கேரளா, கார்நாடக பகுதிகளில் சில மாவட்டங்களில் மழை சற்று அதிகமாகக் காணப்படும். இதன் தொடர்ச்சியாக வால்பாறையில் மழை அதிகம் பெய்ய வாய்ப்புள்ளது.
இதனிடையே பகல் நேர வெப்ப நிலையானது 32 டிகிரி செல்சியஸ்யாகவும் இரவு நேர வெப்ப நிலை 22 முதல் 24 டிகிரி செல்சியாகவும் நிலவ வாய்ப்புள்ளது.
ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. காற்றின் வேகம் கோவையை பொறுத்தவரையில் 5 முதல் 7 கிலோ மீட்டர் வரை வீச வாய்ப்புள்ளது.
தென்மேற்கு பருவமழையானது இன்னும் நிறைவடையவில்லை. செப்டம்பர் 30 ல் நிறைவடைய வாய்ப்புள்ளது. 209 மிமீ மழை எதிர்பார்த்த நிலையில் தற்போது 198 மிமீ தென்மேற்கு பருவமழையானது நமக்கு இதுவரை கிடைத்துள்ளது." என்றார்