கோவை : பீளமேடு அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கோவை : பீளமேடு அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ராமானுஜம் நகர் ரயில்வே தண்டவாளத்தையொட்டி அடர்ந்த புற்கள் நிறைந்த பகுதி உள்ளது. இந்தப் புல் பகுதியில் நேற்று யாரோ மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். ஆனால், அந்தத் தீயை யார் வைத்தார்கள்..? எதற்கு வைத்தார்கள்..? என்பதும் தெரியவில்லை. இந்த நிலையில், ரயில்வே தண்டவாளத்தை ஒட்டி இன்று எரிந்த நிலையில் ஆண் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. பின்னர், சம்பவ இடத்திற்கு சென்ற பீளமேடு போலீசார் பிரேதத்தை ஆய்வு செய்தனர். ஆனால், அங்கு இறந்தவரின் விவரம் குறித்த எந்தவிதமான ஆவணமும் இல்லை.
உடல் முழுவதுமே கருகிய நிலையில் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத நிலையில் இருந்ததால், இறந்தவர் யார்..? எந்த ஊரைச் சேர்ந்தவர்..? என்பதற்கான எந்தச் சான்றும் கிடைக்கவில்லை. ஆகவே, போலீசார் பிரேதத்தை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர். இந்த மர்ம மரணம் தொடர்பாகவும் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
ராமானுஜம் நகர் ரயில்வே தண்டவாளத்தையொட்டி அடர்ந்த புற்கள் நிறைந்த பகுதி உள்ளது. இந்தப் புல் பகுதியில் நேற்று யாரோ மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். ஆனால், அந்தத் தீயை யார் வைத்தார்கள்..? எதற்கு வைத்தார்கள்..? என்பதும் தெரியவில்லை. இந்த நிலையில், ரயில்வே தண்டவாளத்தை ஒட்டி இன்று எரிந்த நிலையில் ஆண் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. பின்னர், சம்பவ இடத்திற்கு சென்ற பீளமேடு போலீசார் பிரேதத்தை ஆய்வு செய்தனர். ஆனால், அங்கு இறந்தவரின் விவரம் குறித்த எந்தவிதமான ஆவணமும் இல்லை.
உடல் முழுவதுமே கருகிய நிலையில் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத நிலையில் இருந்ததால், இறந்தவர் யார்..? எந்த ஊரைச் சேர்ந்தவர்..? என்பதற்கான எந்தச் சான்றும் கிடைக்கவில்லை. ஆகவே, போலீசார் பிரேதத்தை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர். இந்த மர்ம மரணம் தொடர்பாகவும் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.