கோவை : பூங்காவிற்காக ஒதுக்கப்பட்ட பொது இடத்தில் உருவாக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களை உடனடியாக அகற்றுமாறு பார்சன் குடியிருப்பு நல சங்கங்களுக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
கோவை : பூங்காவிற்காக ஒதுக்கப்பட்ட பொது இடத்தில் உருவாக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களை உடனடியாக அகற்றுமாறு பார்சன் குடியிருப்பு நல சங்கங்களுக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட நஞ்சுண்டாபுரம் பகுதியில் அமைந்துள்ள 'பார்சன் அடுக்குமாடி குடியிருப்பு' வளாகத்தில், பொது பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் ஜெனரேட்டர் அறை, ஏ.டி.எம்., மையம் மற்றும் மோட்டார் பம்ப் அறை உள்ளிட்ட கட்டுமானங்கள் கட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பூங்கா மற்றும் பொது பயன்பாட்டிற்காக ஒதுக்கப்படும் திறந்தவெளி இடத்தில் எந்தவித கட்டுமானங்களும் எழுப்பக் கூடாது என்ற விதிகளை மீறி கட்டுமானங்கள் எழுப்பப்பட்டுள்ளதாக தெரியவந்தையடுத்து, கட்டுமானங்களை இடிக்குமாறு பார்சன் குடியிருப்பு நல சங்கங்களுக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் கட்டப்பட்டுள்ள பல்வேறு கட்டுமானங்களை ஆக்டோபர் மாதம் 24ஆம் தேதிக்குள் இடிக்குமாறு நோட்டீஸில் அறிவிக்கப்பட்டுள்ளது.