கோவை : அன்னூர் அருகே குழாய் பதிக்க குழி தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த ஜே.சி.பி., இயந்திரம், அங்கிருந்த மின்கம்பத்தில் உரசியதால் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் டி.வி., வாசிங் மெஷின், குளிர்சாதனப் பெட்டிகள் சேதமடைந்தன.
கோவை : அன்னூர் அருகே குழாய் பதிக்க குழி தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த ஜே.சி.பி., இயந்திரம், அங்கிருந்த மின்கம்பத்தில் உரசியதால் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் டி.வி., வாசிங் மெஷின், குளிர்சாதனப் பெட்டிகள் சேதமடைந்தன.
அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்த நிலையில், மழை ஓய்ந்தவுடன் அன்னூர் ஒன்றியத்திற்குட்பட்ட முதலிப்பாளையத்தில் குழாய் பதிப்பதற்கான பணி ஜே.சி.பி., இயந்திரத்தின் உதவியுடன் நடைபெற்றது. அப்போது, சாலை ஓரத்தில் குழி தோண்டிய போது, எதிர்பாராதவிதமாக ஜே.சி.பி., இயந்திரத்தின் மேல் பகுதி மின்கம்பத்தில் உரசியது. இதனையடுத்து, பயங்கர வெடிசத்தம் ஏற்பட்டு கம்பத்தில் தீப்பொறி கிளம்பியது.

மேலும், முதலிப்பாளையத்தில் உள்ள ரோஜா நகர், சிவா கார்டன் போன்ற பகுதியில் வீடுகளில் இருந்த டி.வி., வாசிங் மெசின், மின் விளக்குகள் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. அந்தப் பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த மின் மோட்டார், மின் விளக்குகள் என அனைத்தும் சேதமானது. இதனையடுத்து, அந்தப் பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இது குறித்து அன்னூர் காவல்துறை மற்றும் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர், நிகழ்விடத்திற்கு சென்ற காவல்துறை மற்றும் மின்வாரிய அதிகாரிகள் பிரச்சனைக்கு காரணமான ஜே.சி.பி., இயந்திர ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டனர். ஒட்டுமொத்தமாக சேதமடைந்த பொருட்களின் மதிப்பு ரூ. 5 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என்பதால் மாவட்ட மின்வாரிய நிர்வாகம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்த நிலையில், மழை ஓய்ந்தவுடன் அன்னூர் ஒன்றியத்திற்குட்பட்ட முதலிப்பாளையத்தில் குழாய் பதிப்பதற்கான பணி ஜே.சி.பி., இயந்திரத்தின் உதவியுடன் நடைபெற்றது. அப்போது, சாலை ஓரத்தில் குழி தோண்டிய போது, எதிர்பாராதவிதமாக ஜே.சி.பி., இயந்திரத்தின் மேல் பகுதி மின்கம்பத்தில் உரசியது. இதனையடுத்து, பயங்கர வெடிசத்தம் ஏற்பட்டு கம்பத்தில் தீப்பொறி கிளம்பியது.

மேலும், முதலிப்பாளையத்தில் உள்ள ரோஜா நகர், சிவா கார்டன் போன்ற பகுதியில் வீடுகளில் இருந்த டி.வி., வாசிங் மெசின், மின் விளக்குகள் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. அந்தப் பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த மின் மோட்டார், மின் விளக்குகள் என அனைத்தும் சேதமானது. இதனையடுத்து, அந்தப் பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இது குறித்து அன்னூர் காவல்துறை மற்றும் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர், நிகழ்விடத்திற்கு சென்ற காவல்துறை மற்றும் மின்வாரிய அதிகாரிகள் பிரச்சனைக்கு காரணமான ஜே.சி.பி., இயந்திர ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டனர். ஒட்டுமொத்தமாக சேதமடைந்த பொருட்களின் மதிப்பு ரூ. 5 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என்பதால் மாவட்ட மின்வாரிய நிர்வாகம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.