மண்பானை மீது நடனமாடி ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த பரத நாட்டிய கலைஞர்கள்

திருப்பூர் : அவிநாசி அருகே 310 பரத நாட்டிய கலைஞர்கள் ஒரே நேரத்தில் மண்பானை மீது நடனமாடி ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து அசத்தினர்.


திருப்பூர் : அவிநாசி அருகே 310 பரத நாட்டிய கலைஞர்கள் ஒரே நேரத்தில் மண்பானை மீது நடனமாடி ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து அசத்தினர்.



ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பெறும் நிகழ்விற்காக அவிநாசியில் 321 பரதநாட்டிய கலைஞர்கள் பங்குபெற்ற ஸ்ரீ நடராஜப் பெருமானை வேண்டி வலியுறுத்தி மண்பானை மீது நாட்டியமாடும் நிகழ்ச்சி அவிநாசியில் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது. ஸ்ரீ பிருந்தாவன் கலாச்சேத்ராவின் சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பள்ளி மாணவ, மாணவிகள், குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 321 பரதநாட்டிய கலைஞர்கள் கலந்து கொண்டு பானை ஏறி நின்று மீது நடனமாடினர். 



ஐந்து நிமிடங்கள் மண்பானை மீது நடனமாடி தங்களது கலைத்திறனை வெளிப்படுத்தினர். இதில், 310 பரத நாட்டிய கலைஞர்களின் நாட்டியம் ஆசிய சாதனை புத்தக நிர்வாகியால் அங்கீகரிக்கப்பட்டது. இதனால், கடந்த 2009-ம் ஆண்டு ஐதராபாத்தில் 50 பேர் மண்பானை மீது பரத நாட்டியமாடி ஆசிய சாதனை முறியடிக்கப்பட்டு, புதிய சாதனை நிகழ்த்தப்பட்டதாக ஆசிய சாதனை புத்தக நிர்வாகியால் அறிவிக்கப்பட்டது. இந்த சாதனை நிகழ்ச்சியைப் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் இந்நிகழ்ச்சியைக் கண்டுகளித்தனர்.



Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...