தமிழகத்தை மறைமுகமாக ஆளுவதன் மூலம் பா.ஜ.க., ஆட்சி செய்யும் மாநிலங்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்வு : முத்தரசன்

திருப்பூர் : தமிழகத்தை மறைமுகமாக ஆட்சி செய்வதன் மூலம் பா.ஜ.க., ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.

திருப்பூர் : தமிழகத்தை மறைமுகமாக ஆட்சி செய்வதன் மூலம் பா.ஜ.க., ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.



இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் எழுச்சி பிரச்சாரப் பயணத்தின் நிறைவு விழா பொதுக்கூட்டம் திருப்பூரில் நேற்று நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தேசிய செயலாளர் அமர்ஜித்கெளர், மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில, தேசிய நிர்வாகிகள் ஏராளமானோரும் பங்கேற்றனர்.

கூட்டத்தில் தேசிய செயலாளர் அமர்ஜித்கெளர் பேசுகையில், "மத்திய அரசு ஆட்சி செய்வதாகக் கூறி மத மோதல்களையும், வெறுப்பு அரசியலையும் செய்து வருகிறது. மத்தியில் இருந்து பா.ஜ.க., அரசை அகற்றுவதன் மூலம்தான் நம் நாகரீக அரசியலை மீட்டெடுக்க முடியும். அதன் மூலம், தான் நாம் இழந்த சுதந்திரத்தை பெறமுடியும்," என்றார். 



தொடர்ந்து, மாநில செயலாளர் முத்தரசன் பேசியதாவது :- இந்தியாவில் பா.ஜ.க., கட்சி 19 மாநிலங்களில் ஆட்சி செய்து வருகிறது என்கிறார்கள். ஆனால், தமிழகத்தையும் சேர்த்து 20 மாநிலங்களை ஆட்சி செய்து வருகிறது. சாதி, மத பிரிவினை குறித்து யார் பேசினாலும், இந்திய கம்யூனிஸ்ட் தொடர்ந்து எதிர்க்கும். அதே வேளையில், வளர்மதி, சோபியா, திருமுருகன் காந்தி, இயக்குநர் கெளதமன் ஆகியோரை உடனுக்குடன் கைது செய்த காவல்துறை, சொந்தமாக செயல்படுவதாக சொல்லிக்கொள்ளும் தமிழக அரசு இன்னும் ஏன் எச்.ராஜா, எஸ்.வி சேகர் ஆகியோரை கைது செய்யவில்லை.

மாணவி சோபியா சொன்னதைப் போல அல்ல, ஓராயிரம் முறை சொல்வோம். எங்களை வேண்டுமானாலும் கைது செய்துகொள்ளலாம். மத்திய அரசு மட்டுமல்லாது மாநில அரசையும் அகற்ற வேண்டும், இவ்வாறு அவர் பேசினார். 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...