திருப்பூர் : உடுமலை அருகே ஓட்டுநர் குடிபோதையில் வாகனத்தை இயக்கியதால், டெம்போ கவிழ்ந்த விபத்தில் 40 பெண்கள் காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
திருப்பூர் : உடுமலை அருகே ஓட்டுநர் குடிபோதையில் வாகனத்தை இயக்கியதால், டெம்போ கவிழ்ந்த விபத்தில் 40 பெண்கள் காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

உடுமலை அருகே நாட்டுக்கல் பாளையத்தில் விவசாய வேலைக்கு கூலி ஆட்களை (பெண்கள் ) டெம்போவில் 70-க்கும் மேற்பட்ட பெண்கள் ஏறிச் சென்றுள்ளனர். அதிக பாரம் மற்றும் ஓட்டுநா் குடிபோதையில் இருந்ததால் கட்டுப்பாட்டை இழந்த டெம்போ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் 40 பெண்கள் ஆம்புலன்ஸ் மூலமாக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவா்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், பலத்த காயமடைந்த 8 பெண்கள் மேல்சிகிச்சைக்காக அருகே தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். மீதமுள்ளவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெம்போவில் ஆட்களை ஏற்ற தடை விதிக்கப்பட்ட போதும், அதிகளவில் பெண்களை ஏற்றிச் செல்லும் டெம்போ உரிமையாளர்கள் மீது காவல்துறை மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக செயல்படுவதே இது போன்ற விபத்துகளுக்க காரணமாக உள்ளது. மேலும், டெம்போ ஓட்டுநர் தலைமறைவாக உள்ள நிலையில், தாராபுரம் போலீசார் கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இனிமேல் இது போன்று யாரும் ஆட்களை ஏற்றாமல் இருக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.


உடுமலை அருகே நாட்டுக்கல் பாளையத்தில் விவசாய வேலைக்கு கூலி ஆட்களை (பெண்கள் ) டெம்போவில் 70-க்கும் மேற்பட்ட பெண்கள் ஏறிச் சென்றுள்ளனர். அதிக பாரம் மற்றும் ஓட்டுநா் குடிபோதையில் இருந்ததால் கட்டுப்பாட்டை இழந்த டெம்போ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் 40 பெண்கள் ஆம்புலன்ஸ் மூலமாக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவா்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், பலத்த காயமடைந்த 8 பெண்கள் மேல்சிகிச்சைக்காக அருகே தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். மீதமுள்ளவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெம்போவில் ஆட்களை ஏற்ற தடை விதிக்கப்பட்ட போதும், அதிகளவில் பெண்களை ஏற்றிச் செல்லும் டெம்போ உரிமையாளர்கள் மீது காவல்துறை மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக செயல்படுவதே இது போன்ற விபத்துகளுக்க காரணமாக உள்ளது. மேலும், டெம்போ ஓட்டுநர் தலைமறைவாக உள்ள நிலையில், தாராபுரம் போலீசார் கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இனிமேல் இது போன்று யாரும் ஆட்களை ஏற்றாமல் இருக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
