மியாவாக்கி திட்டத்தின் கீழ் கே.பி.ஆர்., கல்வி நிறுவனத்தின் வளாகத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவில் 13,000 மரக்கன்றுகள் நடவு

கோவை : கே.பி.ஆர்., கல்வி நிறுவனத்தின் வளாகத்தில் உள்ள ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில் மியாவாக்கி முறையில் 13,000 மரக்கன்றுகள் நடவு செய்யும் திட்டப் பணிகள் தொடங்கின.

கோவை : கே.பி.ஆர்., கல்வி நிறுவனத்தின் வளாகத்தில் உள்ள ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில் மியாவாக்கி முறையில் 13,000 மரக்கன்றுகள் நடவு செய்யும் திட்டப் பணிகள் தொடங்கின. 



தமிழகம் முழுவதும் மாபெரும் மியாவாக்கி திட்டத்தின் மூலம் பசுமையை உருவாக்கும் முயற்சியில் நகர்புற பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் கல்வி மையத்தின் (குயிப்) பொருளாளர் உமா சேகர் தலைமையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, கோவையில் உள்ள நகர்புறங்களை பாதுகாக்கும் விதமாகவும், பசுமையாக மாற்றும் வகையிலும் மியாவாக்கி முறையில் சிறிய பரப்பளவு இடத்தில் அடர்வனம் உருவாக்கும் முயற்சியில் இயற்கை ஆர்வலர்களும், பல்வேறு அமைப்புகளும் ஈடுபட்டுள்ளன. 

இந்தத் திட்டத்தின் கீழ் பெரும்பாலும் வேப்ப மரம், இந்தியன் துலிப் மரம், அசோக மரம், அர்ஜுன் மரம், கம்ஹர் மரம் மற்றும் ரோஸ் மரம் உள்ளிட்ட பல்வேறு மரங்களின் கன்றுகள் நடவு செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கே.பி.ஆர்., கல்வி நிறுவனத்தின் வளாகத்தில் உள்ள ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில் மியாவாக்கி முறையில் 13,000 மரக்கன்றுகள் நடவு செய்யும் திட்டப் பணிகள் தொடங்கின. 'ரோட்டரி வனம்' என்ற தலைப்பில் கோவை ரோட்டரி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்தத் திட்டத்தில், கே.பி.ஆர்., கல்வி நிறுவனம், குயிப், ரோட்டரி மையம் 3201 உள்ளிட்டவை ஒருங்கிணைந்து பணியாற்றுகின்றன. இந்த நிகழ்ச்சியில் கே.பி.ஆர். தொழில் குழுமத்தின் தலைவர் கே.பி., ராமசாமி மற்றும் கோவை மாவட்ட ரோட்டரி 3201 அமைப்பின் தலைவர் ஏ.வி.,பதி மற்றும் குயிப்பின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



இந்த திட்டம் குறித்து நகர்புற பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் கல்வி மையத்தின் இயற்கை கல்வி அதிகாரி எஸ். வருண் கூறுகையில்," நகரங்கள் மற்றும் கிராமங்களில் ஒரே மாதிரி பசுமையான தோற்றதை உருவாக்க வேண்டும். இதன்மூலம், இப்பகுதிகளில் குறுகிய காலநிலையை உருவாக்கவும், பராமரிக்கவும் முடியும். இங்கு நடவு செய்யப்படும் மரக்கன்றுகளை ஒரு ஆண்டுகள் பராமரித்தால், பின்னர் நன்கு வளர்ந்து நல்ல நிலையை அடையும்," என்றார். 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...