கோவை : புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை முன்னிட்டு பாலமலை அரங்கநாதர் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
கோவை : புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை முன்னிட்டு பாலமலை அரங்கநாதர் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
கோவை மாவட்டத்தில் வனத்தில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற வைணவ திருத்தலமான பாலமலை அரங்கநாதர் கோவிலில் இன்று புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரங்கநாதருக்கு துளசி மாலையை சாத்தி வழிபாடு நடத்தினர். அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, அரஙாகநாதருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் திருமஞ்சனம் சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அரங்கநாதர், ஸ்ரீதேவி பூதேவியுடன் முன் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர், பக்தர்கள் அரங்கனுக்குப் பிடித்த துளசி மாலைகளை கொண்டு வந்து சுவாமிக்கு சாற்றி வழிபாடு நடத்தினர். பெரியநாயக்கன்பாளையம் வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த ஆலயத்தில் இன்று ஒரு நாள் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. அதோடு, அன்னதானமும் நடைபெற்றது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கோவை மாவட்டத்தில் வனத்தில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற வைணவ திருத்தலமான பாலமலை அரங்கநாதர் கோவிலில் இன்று புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரங்கநாதருக்கு துளசி மாலையை சாத்தி வழிபாடு நடத்தினர். அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, அரஙாகநாதருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் திருமஞ்சனம் சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அரங்கநாதர், ஸ்ரீதேவி பூதேவியுடன் முன் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர், பக்தர்கள் அரங்கனுக்குப் பிடித்த துளசி மாலைகளை கொண்டு வந்து சுவாமிக்கு சாற்றி வழிபாடு நடத்தினர். பெரியநாயக்கன்பாளையம் வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த ஆலயத்தில் இன்று ஒரு நாள் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. அதோடு, அன்னதானமும் நடைபெற்றது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.