கூட்டமாவது...நெரிசலாவது..! 'மேடம் ஒரு செல்பி' : நடிகைக்காக பணியை மறந்த போலீசார்

திருப்பூர்: திருப்பூரில் செல்போன் கடையின் திறப்பு விழாவிற்கு வந்த நடிகையை காண இளைஞர்களின் கூட்டம் அலை மோதிய நிலையில், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர்கள் பணியை மறந்து, நடிகையுடன் செல்பி எடுப்பதில் ஆர்வம் காட்டியது அனைவரிடத்திலும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


திருப்பூர்: திருப்பூரில் செல்போன் கடையின் திறப்பு விழாவிற்கு வந்த நடிகையை காண இளைஞர்களின் கூட்டம் அலை மோதிய நிலையில், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர்கள் பணியை மறந்து, நடிகையுடன் செல்பி எடுப்பதில் ஆர்வம் காட்டியது அனைவரிடத்திலும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.



சுப்ரீம் மொபைல்ஸின் 30 வது கிளையை நடிகை நிக்கி கல்ராணி திறந்து வைத்தார் - 100 ருபாய்க்கு விற்பனை என அறிவிக்கப்பட்டதால் காலை முதலே ஏராளமானோர் கடை முன் திரண்டனர் . சுப்ரீம் மொபைல்ஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் கிளையை அதிகப்படுத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, திருப்பூரில் தனது 30-வது கிளை நேற்று திறக்கப்பட்டது. 

இந்த கடையினை நடிகை நிக்கி கல்ராணி மற்றும் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம் ஆனந்தன் ஆகியோர் திறந்து வைத்தனர். துவக்கவிழா சலுகையாக முதல் 100 நபர்களுக்கு 100 ருபாய்க்கு செல்போன் வழங்கப்படும் என விளம்பரப்படுத்தப்பட்டிருந்ததால் காலை முதலே குமரன் சாலையில் ஏராளமான பொதுமக்கள் வரிசையில் காத்திருந்து வாங்கி சென்றனர். 



குமரன் சாலையில் காலை முதலே 500-க்கும் மேற்பட்டோர் வரிசையில் காத்திருந்தனர். இந்நிலையில், நடிகை நிக்கி கல்ராணி கடையை திறந்து வைக்க வந்திருந்ததால் அவரைக் காணவும், அவருடன் செல்பி எடுக்கவும் ஏராளமானோர் திரணடனர். ஆனால், அவர்களை ஒழுங்குப்படுத்த வேண்டிய காவல்துறையினரோ, தங்களது பணியினை மறந்து, ரசிகர்களுக்கு முன்னதாக முண்டியடித்திக் கொண்டு நடிகையோடு செல்பி எடுத்துக்கொண்டனர். இது அங்கிருந்தவர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது. மேலும், 100 ருபாய் செல்போனை பெறவும் அதிகளவில் பொதுமக்கள் திரண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டதையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர் . 



Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...