தமிழக மக்களுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்தும் அரசாக எடப்பாடி பழனிசாமி அரசு திகழ்கிறது : டி.டி.வி., தினகரன் குற்றச்சாட்டு

திருப்பூர் :தமிழக மக்களுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்தும் அரசாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செயல்பட்டு வருவதாக உடுமலையில் பொதுமக்களிடையே அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளா் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

திருப்பூர் : திருப்பூர் : தமிழக மக்களுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்தும் அரசாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செயல்பட்டு வருவதாக உடுமலையில் பொதுமக்களிடையே அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளா் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

திருப்பூா் மாவட்டம் முழுவதும் உள்ள மக்களை சந்திக்கும் வகையில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணத்தை அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளா் டிடிவி தினகரன் மேற்கொண்டு வருகிறார். பயணத்தின் 2-வது நாளான இன்று மடத்துக்குளத்தில் இருந்து மக்கள் சந்திப்பை தொடங்கினார். 

மடத்துக்குளம் நால்ரோட்டில் அவர் பேசியதாவது:- தமிழகத்தில் அடிமைகள் ஆட்சி செய்கின்றனர். எம்.ஜி.ஆா்., மறைந்த பிறகு ஜெயலலிதாவால் அ.தி.மு.க., ஆட்சி அமையப்பெற்றது. அம்மாவின் மறைவிற்குப் பிறகு சசிகலாவால் அரியணையில் ஏற்றப்பட்டவர்கள் செய்த துரோகத்தின் காரணமாக சசிகலா சிறையில் அடைக்கப்பட்டார். ஜெயலலிதாவால் அரியணை ஏற்றப்பட்டவர்கள் அடிமை ஆட்சி நடத்தி வருகிறது. ஊழல் ஆட்சி நடத்தி வருகின்றனர். எல்லாத் துறையிலும் ஊழல் நடக்கிறது. 



ஜெயலலிதாவால் அரியணை ஏற்றப்பட்டவர்கள் அடிமை ஆட்சி நடத்தி வருகின்றனர். மத்தியில் ஆளும் பா.ஜ.க.,வின் அடிமைகளாக ஆட்சி செய்து வருகின்றனர். ஜெயலலிதா எதிர்த்த நீட் தோ்வு, ஸ்டொ்லைட், மீத்தேன் உள்ளிட்ட திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்த கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால், தற்போதைய அடிமை ஆட்சியாளர்கள் மத்தியில் ஆளும் பா.ஜ.க., அரசுக்கு தலையாட்டும் அடிமைகளாக செயல்பட்டு வருகின்றனர். தற்போதைய அமைச்சர்கள் செய்த ஊழல்கள் நீதிமன்றத்தின் மூலம் விசாரணை செய்யப்படும் போது, அவா்களின் முகத்திரை கிழிக்கப்படும். தமிழக மக்களுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்தும் அரசாக எடப்பாடி பழனிசாமி அரசு உள்ளது.

கர்நாடகாவில் இருந்து வரும் தண்ணீரை சேமித்து வைக்க எந்த திட்டமும் இவர்களால் செயல்படுத்தமுடியவில்லை. வரும் நாடாளுமன்ற தேர்தலில் குக்கர் சின்னத்தில் வாக்களித்து அம்மாவின் ஆசி பெற்ற வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டும், இவ்வாறு அவர் கூறினார். இதைத் தொடர்ந்து, தளவாய்பட்டினம், தாராபுரம், குண்டடம் பகுதிகளில் மக்களை சந்தித்து பேசினார். 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...