நீலகிரி: நீலகிரியில் தூய்மை விழிப்புணர்வு முகாமை அம்மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று தொடங்கி வைத்தார்.
நீலகிரி: நீலகிரியில் தூய்மை விழிப்புணர்வு முகாமை அம்மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று தொடங்கி வைத்தார்.
தூய்மை பாரதம் திட்டத்தை கடைபிடிக்கும் வகையில், தமிழக சுற்றுலா துறையின் சார்பில் தூய்மை விழிப்புணர்வு வார விழாவினை ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சூழலில், உதகையை அடுத்த தலைக்குந்தா பகுதியில் இவ்விழா தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இந்த விழிப்புணர்வு முகாமை தொடங்கி வைத்தார்.
அப்போது ,சுற்றுலாத்தலங்கள் மற்றும் பொது இடங்களில் குப்பைகளை வீசுவதைத் தவிர்த்து, அதற்குண்டான தொட்டிகளில் போடுவது, பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது குறித்து சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தூய்மை பாரதம் திட்டத்தை கடைபிடிக்கும் வகையில், தமிழக சுற்றுலா துறையின் சார்பில் தூய்மை விழிப்புணர்வு வார விழாவினை ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சூழலில், உதகையை அடுத்த தலைக்குந்தா பகுதியில் இவ்விழா தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இந்த விழிப்புணர்வு முகாமை தொடங்கி வைத்தார்.
அப்போது ,சுற்றுலாத்தலங்கள் மற்றும் பொது இடங்களில் குப்பைகளை வீசுவதைத் தவிர்த்து, அதற்குண்டான தொட்டிகளில் போடுவது, பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது குறித்து சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.