கோவை: வனவிலங்குகள் வாரத்தின் ஒரு பகுதியாக வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள பல்வேறு போட்டிகளில் தங்கள் பெயர்களை பதிவு செய்ய மாணவர்களுக்கு கோவை மாவட்ட வனத்துறை அழைப்பு விடுத்துள்ளது.
கோவை: வனவிலங்குகள் வாரத்தின் ஒரு பகுதியாக வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள பல்வேறு போட்டிகளில் தங்கள் பெயர்களை பதிவு செய்ய மாணவர்களுக்கு கோவை மாவட்ட வனத்துறை அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்து கோவை மாவட்ட வன அலுவலர் (பொறுப்பு) செண்பகபிரியா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வினாடி-வினா, ஓவியப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் தமிழக வனத்துறை சார்பில் நடைபெற்ற உள்ளன. கோவை வனக்கல்லூரியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு காலை 8 மணியளவில் இந்த போட்டிகள் தொடங்குகிறது.
ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லூரியில் இருந்தும் அணிக்கு இரண்டு மாணவர்கள் இந்த போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். இந்த போட்டிகள் சூழல் மற்றும் வன விலங்குகள் தொடர்பாக இருக்கும்.
வன விலங்குகளை காப்பதன் அவசியம், மற்றும் அவற்றிற்கான நமது பங்களிப்பு உள்ளிட்ட தலைப்புகளில் இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. தேவையான உபகரணங்களை மாணவர்கள் எடுத்து வர வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு,
தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: வன அலுவலர் அலுவலகம்- 0422-2456911, தினேஷ் குமார் (ACF) - 9443082214, செந்தில்குமார் வனச்சரகர்-9994449248.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து கோவை மாவட்ட வன அலுவலர் (பொறுப்பு) செண்பகபிரியா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வினாடி-வினா, ஓவியப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் தமிழக வனத்துறை சார்பில் நடைபெற்ற உள்ளன. கோவை வனக்கல்லூரியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு காலை 8 மணியளவில் இந்த போட்டிகள் தொடங்குகிறது.
ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லூரியில் இருந்தும் அணிக்கு இரண்டு மாணவர்கள் இந்த போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். இந்த போட்டிகள் சூழல் மற்றும் வன விலங்குகள் தொடர்பாக இருக்கும்.
வன விலங்குகளை காப்பதன் அவசியம், மற்றும் அவற்றிற்கான நமது பங்களிப்பு உள்ளிட்ட தலைப்புகளில் இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. தேவையான உபகரணங்களை மாணவர்கள் எடுத்து வர வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு,
தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: வன அலுவலர் அலுவலகம்- 0422-2456911, தினேஷ் குமார் (ACF) - 9443082214, செந்தில்குமார் வனச்சரகர்-9994449248.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.