பாலியல் தொந்தரவு கொடுத்த எஸ்.என்.எஸ்., கல்லூரியின் தலைமை இயக்குநரை கண்டித்து மாணவர்கள் போராட்டம்

கோவை : பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த எஸ்.என்.எஸ்., கல்லூரியின் தலைமை இயக்குநரை கண்டித்து அக்கல்லூரியின் மாணவ, மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை : பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த எஸ்.என்.எஸ்., கல்லூரியின் தலைமை இயக்குநரை கண்டித்து அக்கல்லூரியின் மாணவ, மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சரணவம்பட்டி பகுதி அருகே செயல்பட்டு வரும் எஸ்.என்.எஸ்., கல்லூரியில் தலைமை இயக்குநராக சுப்ரமணியன் (65) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், அங்கு பணியாற்றி வரும் பெண் ஊழியர்களுக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இவரது தொல்லையை பொறுக்க முடியாத பல பெண்கள் வேலையை விட்டும் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, அவரால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், நண்பர்களிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறி அழுதுள்ளார். தொடர்ந்து, நண்பர்கள் உதவியுடன், பாலியல் தொல்லை கொடுக்கும் நிர்வாக இயக்குனரை மறைமுக கேமிராக்கள் உதவியுடன் படம் பிடித்தனர். அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 

இந்த நிலையில், பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த எஸ்.என்.எஸ்., கல்லூரியின் தலைமை இயக்குநரை கண்டித்து அக்கல்லூரியின் மாணவ, மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், அவருக்கான பணியை உறுதி செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். 

இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் துடியலூர் மகளிர் காவல் நிலையத்தின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...