நீலகிரி : சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த சிறந்த விளம்பரத்திற்கான குறும்படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி : சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த சிறந்த விளம்பரத்திற்கான குறும்படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் மொத்தம் 8,000 பள்ளிகளில் மாவட்டத்திற்கு 250 பள்ளிகள் வீதம் சூழல் மன்றங்களுக்கு 40 முதல் 50 மாணவர்களைக் கொண்டு தேசிய பசுமைப்படை செயல்படுகிறது. மேலும், தமிழக அரசின் நிதியுதவியுடன் 11,469 பள்ளிகளில் தமிழ்நாடு முழுவதும் சூழல் மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.
சுற்றுச்சூழல் அமைச்சரின் அறிவிப்பின்படி, பொதுமக்களைச் சென்றடையும் வகையில், உரிய நிறுவனங்களிடம் இருந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து நிலம், காற்று, நீர், வனம், தொழிற்சாலை நடவடிக்கைகள், தாவரங்கள், விலங்குகள் உள்ளிட்ட ஏதாவது ஒரு தலைப்பில், பொது ஊடகங்களில் விளம்பரப்படுத்த ஏதுவான, தக்க தரமான விளம்பரப்படங்கள், விளம்பர பட தயாரிப்பு நிறுவனங்கள்/திரைப்பட இயக்குநர்கள்/திரைப்பட பயிற்சி மையம் மற்றும் திரைப்பட துறையில் அனுபவம் உள்ள தனிநபர்களிடம் இருந்து குறுந்தகடு, பென் டிரைவ் மூலம் சுற்றுச்சூழல் துறைக்கு 15.12.2018-க்குள் அனுப்ப வேண்டும்.
சிறந்த முதல் 3 படங்கள் தேர்வு செய்யப்பட்டு, பரிசுத் தொகையாக முறையே ரூ. 7 லட்சம், ரூ. 6 லட்சம் மற்றும் 5 லட்சம் வழங்கப்படுவதோடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் சான்றிதழ்களும் வழங்கப்படும்.
தமிழகம் முழுவதும் மொத்தம் 8,000 பள்ளிகளில் மாவட்டத்திற்கு 250 பள்ளிகள் வீதம் சூழல் மன்றங்களுக்கு 40 முதல் 50 மாணவர்களைக் கொண்டு தேசிய பசுமைப்படை செயல்படுகிறது. மேலும், தமிழக அரசின் நிதியுதவியுடன் 11,469 பள்ளிகளில் தமிழ்நாடு முழுவதும் சூழல் மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.
சுற்றுச்சூழல் அமைச்சரின் அறிவிப்பின்படி, பொதுமக்களைச் சென்றடையும் வகையில், உரிய நிறுவனங்களிடம் இருந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து நிலம், காற்று, நீர், வனம், தொழிற்சாலை நடவடிக்கைகள், தாவரங்கள், விலங்குகள் உள்ளிட்ட ஏதாவது ஒரு தலைப்பில், பொது ஊடகங்களில் விளம்பரப்படுத்த ஏதுவான, தக்க தரமான விளம்பரப்படங்கள், விளம்பர பட தயாரிப்பு நிறுவனங்கள்/திரைப்பட இயக்குநர்கள்/திரைப்பட பயிற்சி மையம் மற்றும் திரைப்பட துறையில் அனுபவம் உள்ள தனிநபர்களிடம் இருந்து குறுந்தகடு, பென் டிரைவ் மூலம் சுற்றுச்சூழல் துறைக்கு 15.12.2018-க்குள் அனுப்ப வேண்டும்.
சிறந்த முதல் 3 படங்கள் தேர்வு செய்யப்பட்டு, பரிசுத் தொகையாக முறையே ரூ. 7 லட்சம், ரூ. 6 லட்சம் மற்றும் 5 லட்சம் வழங்கப்படுவதோடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் சான்றிதழ்களும் வழங்கப்படும்.