கோவை : பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு நேரம் விரயம் தவிர்த்து விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் தெரிவித்துள்ளார்.
கோவை : பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு நேரம் விரயம் தவிர்த்து விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் தெரிவித்துள்ளார்.
கோவையில் கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் 14-ம் தேதி பாஸ்போர்ட் அலுவலகம் திறக்கப்பட்டது. இங்கு, கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், ஈரோடு மற்றும் நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் விண்ணப்பித்து பாஸ்போர்ட்டை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், கோவை பாஸ்போர்ட் அலுவலகம் திறக்கப்பட்டு 10-ம் ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் சிவக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் கூறியதாவது :- முன்பு பாஸ்போர்ட் கோரி கவுண்டர்களில் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்ய 45 நிமிடங்கள் ஆகி வந்தன. தற்போது, அது 14 நிமிடங்களாக நேரம் குறைக்கப்பட்டதுடன், அந்தப் பணிகள் நவீனமயமாக்கப்பட்டுள்ளது. அதோடு, விண்ணப்பதாரர்களின் காவலர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு நேரமும் தற்போது வெகுவாகக் குறைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம், விண்ணப்பித்தவர்களுக்கு பாஸ்போர்ட் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த 10 ஆண்டுகளில் கோவை பாஸ்போர்ட் அலுவலகத்தின் மூலம், 11,52,711 பேரிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 11,25,178 பேருக்கு பாஸ்போர்ட் விநியோகிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கோவையில் கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் 14-ம் தேதி பாஸ்போர்ட் அலுவலகம் திறக்கப்பட்டது. இங்கு, கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், ஈரோடு மற்றும் நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் விண்ணப்பித்து பாஸ்போர்ட்டை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், கோவை பாஸ்போர்ட் அலுவலகம் திறக்கப்பட்டு 10-ம் ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் சிவக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் கூறியதாவது :- முன்பு பாஸ்போர்ட் கோரி கவுண்டர்களில் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்ய 45 நிமிடங்கள் ஆகி வந்தன. தற்போது, அது 14 நிமிடங்களாக நேரம் குறைக்கப்பட்டதுடன், அந்தப் பணிகள் நவீனமயமாக்கப்பட்டுள்ளது. அதோடு, விண்ணப்பதாரர்களின் காவலர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு நேரமும் தற்போது வெகுவாகக் குறைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம், விண்ணப்பித்தவர்களுக்கு பாஸ்போர்ட் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த 10 ஆண்டுகளில் கோவை பாஸ்போர்ட் அலுவலகத்தின் மூலம், 11,52,711 பேரிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 11,25,178 பேருக்கு பாஸ்போர்ட் விநியோகிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.