கோவை : கோவை மாநகரில் இதுவரை 103 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
கோவை : கோவை மாநகரில் இதுவரை 103 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
கோவை மாநகரில் தொடர்ந்து குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கோவை மாநகர காவல் ஆணையாளர் பெரியய்யா உத்தரவின் பேரில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து வருகின்றனர். இது தொடர்பாக, மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோவை மாநகரில் நடப்பாண்டில் இதுவரை திருட்டு மற்றும் கொள்ளை வழக்கில் ஈடுபட்டவர்கள் 41, ரவுடிகள் 37, போதை மருந்து குற்றவாளிகள் 24, திருட்டு வீடியோ குற்றவாளிகள் ஒருவர் என மொத்தம் 103 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தவிர மூன்று பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்திலும், அதேபோல உணவு பாதுகாப்பு சட்டத்தில் மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவை மாநகரில் தொடர்ந்து குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கோவை மாநகர காவல் ஆணையாளர் பெரியய்யா உத்தரவின் பேரில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து வருகின்றனர். இது தொடர்பாக, மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோவை மாநகரில் நடப்பாண்டில் இதுவரை திருட்டு மற்றும் கொள்ளை வழக்கில் ஈடுபட்டவர்கள் 41, ரவுடிகள் 37, போதை மருந்து குற்றவாளிகள் 24, திருட்டு வீடியோ குற்றவாளிகள் ஒருவர் என மொத்தம் 103 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தவிர மூன்று பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்திலும், அதேபோல உணவு பாதுகாப்பு சட்டத்தில் மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.