திருப்பூர் : அதிகாரிகளை தரக்குறைவாக பேசிய பா.ஜ.க., தேசிய செயலாளர் எச். ராஜா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப்பூரில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.
திருப்பூர் : அதிகாரிகளை தரக்குறைவாக பேசிய பா.ஜ.க., தேசிய செயலாளர் எச். ராஜா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப்பூரில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் இந்து முன்னணி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க., தேசிய செயலாளர் எச். ராஜா, இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களை மிகவும் தரக்குறைவாக பேசியுள்ளார். இதனைக் கண்டித்து திருப்பூர் உதவி ஆணையர் எஸ்.வி. ஹர்சினி தலைமையில் கோயில் செயல் அலுவலர்கள், ஆய்வர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் சார்பில் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் நேற்று நடத்தப்பட்டது.

இதையடுத்து, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழியிடம் புகார் மனு ஒன்றையும் அளித்தனர். அதில், கூறியிருப்பதாவது :- எச். ராஜா அறநிலையத்துறையின் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைப் புனைந்து அநாகரீகமான முறையில் அரசு அலுவலர்களாகிய எங்களை விமர்சிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதன் உச்சமாக அன்றைய பொதுக்கூட்டத்தில் அறநிலையத்துறையில் பணிபுரியும் அலுவலர்கள் குறித்தும், குடும்பத்தில் உள்ள பெண்களின் மாண்பைக் குறைக்கும் வகையிலும் பேசி உள்ளார்.

ஆகவே. எச்.ராஜா மீது பெண்களை இழிவுப்படுத்துதல், அரசு அலுவலர்களை தரக்குறைவாக இழிவாகப் பேசுதல், அரசுப் பணியை செய்ய விடாமல் தடுத்தல், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசுதல், வன்முறையை தூண்டும் வகையில் பேசுதல் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைக்கான தண்டனை சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் இந்து முன்னணி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க., தேசிய செயலாளர் எச். ராஜா, இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களை மிகவும் தரக்குறைவாக பேசியுள்ளார். இதனைக் கண்டித்து திருப்பூர் உதவி ஆணையர் எஸ்.வி. ஹர்சினி தலைமையில் கோயில் செயல் அலுவலர்கள், ஆய்வர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் சார்பில் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் நேற்று நடத்தப்பட்டது.

இதையடுத்து, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழியிடம் புகார் மனு ஒன்றையும் அளித்தனர். அதில், கூறியிருப்பதாவது :- எச். ராஜா அறநிலையத்துறையின் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைப் புனைந்து அநாகரீகமான முறையில் அரசு அலுவலர்களாகிய எங்களை விமர்சிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதன் உச்சமாக அன்றைய பொதுக்கூட்டத்தில் அறநிலையத்துறையில் பணிபுரியும் அலுவலர்கள் குறித்தும், குடும்பத்தில் உள்ள பெண்களின் மாண்பைக் குறைக்கும் வகையிலும் பேசி உள்ளார்.

ஆகவே. எச்.ராஜா மீது பெண்களை இழிவுப்படுத்துதல், அரசு அலுவலர்களை தரக்குறைவாக இழிவாகப் பேசுதல், அரசுப் பணியை செய்ய விடாமல் தடுத்தல், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசுதல், வன்முறையை தூண்டும் வகையில் பேசுதல் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைக்கான தண்டனை சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.