திருப்பூர்: திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை செய்து வந்த 6 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருப்பூர்: திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை செய்து வந்த 6 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
பெருமாநல்லூர், குன்னத்தூர் ஆகிய பகுதிகளில் சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்தது. அதில், குன்னத்தூர் காவல் எல்லைக்கு உட்பட்ட நெட்டிச்சிபாளையம் பகுதியில் சட்டவிரோதமாக கேரள மாநில லாட்டரி விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பாக கோபியைச் சேர்ந்த சங்கரலிங்கம் (30), குமார் (42), பாபு (42), நடராஜன் (47), சீனிவாசன் (21), ராஜேஷ்குமார் (30) ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்களிடம் இருந்து 193 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ. 80,580-ம் கைப்பற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்டவர்கள் அவிநாசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
பெருமாநல்லூர், குன்னத்தூர் ஆகிய பகுதிகளில் சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்தது. அதில், குன்னத்தூர் காவல் எல்லைக்கு உட்பட்ட நெட்டிச்சிபாளையம் பகுதியில் சட்டவிரோதமாக கேரள மாநில லாட்டரி விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பாக கோபியைச் சேர்ந்த சங்கரலிங்கம் (30), குமார் (42), பாபு (42), நடராஜன் (47), சீனிவாசன் (21), ராஜேஷ்குமார் (30) ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்களிடம் இருந்து 193 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ. 80,580-ம் கைப்பற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்டவர்கள் அவிநாசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.