கோவை: சிங்காநல்லுார் பகுதியில் அமைந்துள்ள தனியார் குடியிருப்பு வளாகத்தில், விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களை உடனடியாக இடிக்குமாறு கட்டிட உரிமையாளருக்கு கோவை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
கோவை : சிங்காநல்லுார் பகுதியில் அமைந்துள்ள தனியார் குடியிருப்பு வளாகத்தில், விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களை உடனடியாக இடிக்குமாறு கட்டிட உரிமையாளருக்கு கோவை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட தனலட்சுமிபுரத்தில் 8.05 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள 'ஸ்ருதி என்கிளேவ்' குடியிருப்பு வளாகத்தில் 137 குடியிருப்புகள் உள்ளன. இங்கு, அனுமதிக்கு மாறாக கட்டிடங்கள் கட்டி இருப்பதாகவும், பொது ஒதுக்கீடு விதிகளின்படி, 30 அடி அகலப்பாதை ஒதுக்கவில்லை என்றும், விவசாய நிலத்திற்கு செல்லும் பாதையை அடைத்து கட்டுமானங்கள் எழுப்பப்பட்டுள்ளதாகவும் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் சென்ற வருடம் கோவை மாநகராட்சியில் முறையிட்டனர்.

இதையேற்று குடியிருப்பு வளாகத்தை ஆய்வு செய்த நகரமைப்பு பிரிவினர், விதிமுறைகள் மீறப்பட்டிருப்பதை உறுதி செய்தனர். இதனையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் மாநகராட்சி ஆணையாளர் சார்பில் 'ஸ்ருதி என்கிளேவ்'-விற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. நோட்டீஸ் அனுப்பப்பட்டும் மாநகராட்சிக்கு தானமாக வழங்கப்பட வேண்டிய 30 அடி அகலப்பாதை வழங்காததால், நகர ஊரமைப்பு ஆணையர் மற்றும் உள்ளூர் திட்டக்குழும உறுப்பினர் செயலர் கட்டிடத்தின் திட்ட அனுமதியை ரத்து செய்வதாக உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், வழங்கப்பட்ட காலக்கெடுவுக்குள் திருத்திய வரைபடம் மற்றும் உரிய ஆவணங்களுடன், உள்ளூர் திட்டக்குழுமத்திடம் விண்ணப்பிக்க தவறியதால், விதிகளை மீறி கட்டியுள்ள கட்டிடங்களை உடனடியாக இடிக்குமாறு கிழக்கு மண்டல உதவி நகரமைப்பு அலுவலர் சார்பில் கட்டிட உரிமையாளர்களுக்கு உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது.
கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட தனலட்சுமிபுரத்தில் 8.05 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள 'ஸ்ருதி என்கிளேவ்' குடியிருப்பு வளாகத்தில் 137 குடியிருப்புகள் உள்ளன. இங்கு, அனுமதிக்கு மாறாக கட்டிடங்கள் கட்டி இருப்பதாகவும், பொது ஒதுக்கீடு விதிகளின்படி, 30 அடி அகலப்பாதை ஒதுக்கவில்லை என்றும், விவசாய நிலத்திற்கு செல்லும் பாதையை அடைத்து கட்டுமானங்கள் எழுப்பப்பட்டுள்ளதாகவும் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் சென்ற வருடம் கோவை மாநகராட்சியில் முறையிட்டனர்.

இதையேற்று குடியிருப்பு வளாகத்தை ஆய்வு செய்த நகரமைப்பு பிரிவினர், விதிமுறைகள் மீறப்பட்டிருப்பதை உறுதி செய்தனர். இதனையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் மாநகராட்சி ஆணையாளர் சார்பில் 'ஸ்ருதி என்கிளேவ்'-விற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. நோட்டீஸ் அனுப்பப்பட்டும் மாநகராட்சிக்கு தானமாக வழங்கப்பட வேண்டிய 30 அடி அகலப்பாதை வழங்காததால், நகர ஊரமைப்பு ஆணையர் மற்றும் உள்ளூர் திட்டக்குழும உறுப்பினர் செயலர் கட்டிடத்தின் திட்ட அனுமதியை ரத்து செய்வதாக உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், வழங்கப்பட்ட காலக்கெடுவுக்குள் திருத்திய வரைபடம் மற்றும் உரிய ஆவணங்களுடன், உள்ளூர் திட்டக்குழுமத்திடம் விண்ணப்பிக்க தவறியதால், விதிகளை மீறி கட்டியுள்ள கட்டிடங்களை உடனடியாக இடிக்குமாறு கிழக்கு மண்டல உதவி நகரமைப்பு அலுவலர் சார்பில் கட்டிட உரிமையாளர்களுக்கு உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது.