கோவை: அரவிந்த் கண் மருத்துவமனையில் நர்சிங் பயின்று வரும் உடுமலைப்பேட்டையை சேர்ந்த நர்சிங் மாணவி நேற்று மாலை விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: அரவிந்த் கண் மருத்துவமனையில் நர்சிங் பயின்று வரும் உடுமலைப்பேட்டையை சேர்ந்த நர்சிங் மாணவி நேற்று மாலை விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடுமலைப்பேட்டை சோழமாதேவி பகுதியைச் சேர்ந்த பழனியப்பன் என்பவரது மகள் மாலதி (21). இவர் அரவிந்த் கண் மருத்துவமனையில் உள்ள விடுதியில் தங்கி நர்சிங் படித்து வந்தார். இந்த நிலையில், வழக்கம் போல பயிற்சிக்கு சென்ற மாணவி நேற்று மாலை திடீரென அறையில் தூக்கு போட்டி தற்கொலை செய்துகொண்டார்.

இதைக் கண்ட சக மாணவிகள் மருத்துவமனை நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். மேலும், இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற பீளமேடு போலீசார் மாணவியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், மாணவியின் மரணம் குறித்த தகவல் காலதாமதமானது ஏன்? என உறவினர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால், நிர்வாகத் தரப்பில் சரியான பதில் வராததால் நிர்வாகத்திற்கும், உறவினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து. போலீசார் மாணவியின் உறவினர்களை சமாதானப்படுத்தினர். மேலும், மாணவியின் மரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.