நீலகிரி : கோத்தகிரியில் அனுமன் சேனா சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 65 விநாயகர் சிலைகள் இன்று ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, விசர்ஜனம் செய்யப்பட்டது.
நீலகிரி : கோத்தகிரியில் அனுமன் சேனா சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 65 விநாயகர் சிலைகள் இன்று ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, விசர்ஜனம் செய்யப்பட்டது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உதகையில் பல்வேறு இந்து அமைப்புகளால் நகரின் பல இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, மூன்று நாட்கள் வழிபாடுகளுக்குப் பிறகு நேற்று முன்தினம் முதல் விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு விசர்ஜனம் செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில், 3-வது நாளாக அனுமன் சேனா சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 65 விநாயகர் சிலைகள் இன்று ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, விசர்ஜனம் செய்யப்பட்டது. டானிங்டன், காமராஜர் சதுக்கம், மார்க்கெட், பேருந்து நிலையம், பஜார், காம்பாய்கடை, ராம்சந்த் வழியாக ஊர்வலம் எடுத்துச் செல்லப்பட்டு, பின்பு உயிலட்டி நீர்வீழ்ச்சியில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. இந்த ஊர்வலத்திற்கு இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தையொட்டி 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.