கனமழையால் சாக்கடை நீரில் மிதக்கும் மேட்டுப்பாளையம் அரசுப் பள்ளி : அதிகாரிகளின் மெத்தனத்தால் சிரமப்படும் மாணவிகள்

கோவை : மேட்டுப்பாளையத்தில் பெய்த கன மழையால் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்குள் புகுந்த சாக்கடை கழிவு நீரை வெளியேற்றுவதில் அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவதால், வகுப்பறைக்கு சாக்கடை நீரில் நடந்து செல்ல வேண்டிய நிலை மாணவிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

கோவை : மேட்டுப்பாளையத்தில் பெய்த கன மழையால் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்குள் புகுந்த சாக்கடை கழிவு நீரை வெளியேற்றுவதில் அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவதால், வகுப்பறைக்கு சாக்கடை நீரில் நடந்து செல்ல வேண்டிய நிலை மாணவிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட அண்ணா மார்க்கெட் அருகே அமைந்துள்ள நகரவை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், பள்ளி அருகே உள்ள சாக்கடை கால்வாய் சரிவர ஆழப்படுத்தாத காரணத்தால், அதில் அடைப்பு ஏற்பட்டு சாக்கடை தண்ணீர் பள்ளிக்குள் நுழைந்து வருகிறது. இதனால், மாணவிகள் இந்த சாக்கடை நீரினுள் நடந்து தான் பள்ளிக்குள் நுழைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, மாணவிகள் மிகவும் சிரமமடைந்து வருகின்றனர். இது குறித்து பலமுறை நகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. 



இந்த நிலையில், இன்று மேட்டுப்பாளையம் நகரில் மாலையில் பெய்த கன மழையால் மீண்டும் பள்ளிக்குள் மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து பள்ளிக்குள் தேங்கியது. இதனால், மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவிகள், சாக்கடை நீரில் நடந்து பள்ளியை விட்டு வெளியேறினர். இதனால், மாணவிகளுக்கு தொற்று நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, புதியதாகப் பொறுப்பேற்றுள்ள நகராட்சி ஆணையர் உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காண வலியுறுத்திய பெற்றோர், தவறும்பட்சத்தில் போராட்டம் நடத்த உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...