எச். ராஜாவிற்கு பிரஷர் இருக்கிறதா என்பதை பரிசோதிக்க வேண்டும் : கோவையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சனம்

கோவை : காவல்துறை பற்றியும் நீதிமன்றம் பற்றியும் எச். ராஜா பேசியிருப்பது கோபத்தின் வெளிப்பாடாகத்தான் பார்க்கிறேன் என்றும், அவருக்கு முதலில் பிரஷர் இருக்கிறதா என்பதை பரிசோதித்து கொள்ள வேண்டும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.


கோவை : காவல்துறை பற்றியும் நீதிமன்றம் பற்றியும் எச். ராஜா பேசியிருப்பது கோபத்தின் வெளிப்பாடாகத்தான் பார்க்கிறேன் என்றும், அவருக்கு முதலில் பிரஷர் இருக்கிறதா என்பதை பரிசோதித்து கொள்ள வேண்டும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.

கோவை பெரியகடை வீதியில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து பின்பு செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசியதாவது:- விலைவாசி உயர்வு மக்களை பாதிக்காத வகையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது கண்டிக்கதக்கது. சிலையை அவமதித்தவர்கள் மனிதர்களே கிடையாது, காட்டு மிராண்டிகள். தமிழகத்தில் ஜனநாயக உரிமையும், கருத்துரிமையும் இருப்பதால்தான் எச். ராஜாவால் பேசமுடிகின்றது. எச். ராஜா பேசியதையும், மாணவி சோபியா பேசியதையும் ஒப்பிட்டு பேசுவது சரியல்ல. 

தமிழிசைக்கு ஏற்பட்டது போல அரசியல் கட்சியினர் யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம் என்பதால் சோபியா மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. அ.தி.மு.க., சிறப்பாக, தெம்பாக இருக்கிறது. இங்கிருந்து ஒருவர் போனால் 10 பேர் வருவார்கள். 

எச். ராஜா மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். அவருக்கு முதலில் பிரஷர் இருக்கிறதா என்பதை பரிசோதித்து கொள்ள வேண்டும். முந்தைய அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் அவதூறு கூறியவர்கள் மீது அம்மா குற்றச்சாட்டின் அடிப்படையில் அவதூறு வழக்கு தொடுத்தார். இப்போது பிரச்சினையில்லாத ஆட்சியை முதலமைச்சர் எடப்பாடி வழங்கி வருகிறார்.

குற்றம் சொல்வது தி.மு.க.,வின் வாடிக்கை. எதிர்கட்சியின் பணியை ஸ்டாலின் செய்து வருகிறார். தமிழ்நாடு காவல்துறை இந்திய அளவில், உலகளவில் சிறந்தது என்ற பேச்சு உள்ள நிலையில், எச். ராஜா காவல்துறை பற்றியும் நீதிமன்றம் பற்றியும் பேசியுள்ளது கோபத்தின் வெளிப்பாடாகத்தான் பார்க்கிறேன். 

அவர் மீதான வழக்கில் காவல்துறை மற்றும் நீதிமன்றம் சட்டரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ளும். அ.தி.மு.க.,வில் உயர்பதவி முதலமைச்சர் தான் வேறு யாரும் உயர் பதவி இல்லை, என்றார். 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...