திருப்பூரில் பட்டா வேண்டி பொதுமக்களுடன் வந்து ஆட்சியரிடம் மனு அளித்த அ.தி.மு.க., எம்.எல்.ஏ

திருப்பூர்: திருப்பூரில் 30 வருடங்களுக்கு மேலாக ஒரே இடத்தில் வசித்து வரும் பொதுமக்களுக்கு உடனடியாக பட்டா வழங்கக்கோரி அ.தி.மு.க., எம்.எல்.ஏ உட்பட பொதுமக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

திருப்பூர்: திருப்பூரில் 30 வருடங்களுக்கு மேலாக ஒரே இடத்தில் வசித்து வரும் பொதுமக்களுக்கு உடனடியாக பட்டா வழங்கக்கோரி அ.தி.மு.க., எம்.எல்.ஏ உட்பட பொதுமக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். 



பட்டுக்கோட்டையார் நகர் பகுதியில் கடந்த 30 வருடங்களாக 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 1999-ம் ஆண்டு பல்வேறு போராட்டங்கள் நடத்தியதன் விளைவாக அரசு அவர்களுக்கு பட்டா வழங்க முயற்சி எடுத்தது.

ஆனால், அந்த இடத்தில் ஏற்கனவே அரசிடம் விவசாயத்திற்காக பட்டா பெற்று, அதனை வீட்டு மனைகளாக விற்க முயற்சித்தற்காக பட்டாவை ரத்து செய்த நிலையில், பொதுமக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பின்னர் வழக்கை வாபஸ் பெற்ற நிலையில் அரசு வழக்கு நிலுவையில் இருப்பதைக் காரணம் காட்டி இன்னும் பட்டா வழங்காமல் காலம் தாழ்த்துவதாகக் கூறப்படுகிறது.

இதனை மாநில அரசின் கவனத்திற்கு மாவட்டம் நிர்வாகம் கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தனர்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர், "விரைவில் பொதுமக்களின் இடத்திற்கான பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். இதற்காக சென்னை சென்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்திக்கவும் தயாராக உள்ளேன்." என்றார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...